தருமபுரி, மார்ச் 2- அரூர் அருகே அரசு நகர் பேருந்து வரத தால் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு செல் லும் மாணவ, மாணவியர்கள் அவதியுற்ற னர். அரூர்-சித்தேரி செல்லும் சாலையானது 26 கிலோ மீட்டர் தூரம் கொண்டதாகும். இந்த வழித்தடத்தில் சித்தேரி, சூரியக்கடை, தோல்தூக்கி, வள்ளிமதுரை, வாழைத்தோட் டம், கீரைப்பட்டி, கௌப்பாறை, எல்லப்பு டையாம்பட்டி, சுமைதாங்கி மேடு உள் ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்தப் பகுதி யில் அரசு நகர் பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், எல்லப்புடையாம்பட்டி கிராமப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளி மாண வர்கள் பள்ளிக்கு சென்று வரும் வகையில், 13 மற்றும் 25 ஆகிய தடம் எண்கள் கொண்ட அரசு நகர் பேருந்துகள் சித்தேரி பிரிவு சாலை யில் இருந்து, எல்லப்புடையாம்பட்டி ஊருக் குள் நாள்தோறும் சென்று வரும் வகையில், புதிய வழித்தடத்தை மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி வைத் தார். அதாவது இந்த பேருந்துகள் எல்லப் புடையாம்பட்டிக்கு காலை 8.30 மணியளவி லும், மாலையில் 5.30 மணியளவிலும் மாணவர்கள் சென்றும் வரும் வகையில் இயக்கப்பட்டன. இந்த நிலையில், திங்களன்று 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் தொடங் கிய நிலையில், எல்லப்புடையாம்பட்டிக்கு அரசு நகர் பேருந்துகள் இயக்கப்பட வில்லை. இதனால், எல்லப்புடையாம்பட் டியில் இருந்து தேர்வு எழுத செல்லும் மாணவ, மாணவியர், பொதுமக்கள் பாதிக் கப்பட்டனர். இது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவ ரத்து கழக அரூர் கிளை மேலாளர் கூறுகை யில், இதுதொடர்பாக விசாரித்து தவறு இருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத செல்லும் மாண வர்கள் எங்கும் நிறுத்தினாலும் அரசுப் பேருந்துகள் நின்று அழைத்துச் செல்லும். அதேபோல், பேருந்தில் பயணம் செய்வதற் கான இலவச பாஸ் இல்லை என்ற சூழ்நிலை யிலும் பயணம் செய்ய அனுமதி வழங்கப்ப டும். அரூர் பகுதியில் வழக்கமாக இயக்கப் படும் அனைத்து வழித்தடங்களிலும் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என அவர் தெரி வித்தார்.