tamilnadu

img

வாக்குறுதிகளை நிறைவேற்றாத அன்புமணி ராமதாஸ்: உதயநிதி ஸ்டாலின் தாக்கு

தருமபுரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்குமாருக்கு ஆதரவு கேட்டு தருமபுரி 4 ரோடு பகுதியில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியது:கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட அன்புமணி, தருமபுரியிலேயே வீடு எடுத்து தங்கி மக்களுக்காக உழைப்பேன் என்று கூறினார். சிப்காட் தொழிற்பேட்டையை உருவாக்குவேன் என்றார். இதுபோல பல வாக்குறுதிகளை அளித்த அன்புமணி தொகுதிக்கே வராதவர். யாரைப் பற்றி ஆளுநரிடம் ஊழல் பட்டியல் அளித்தாரோ அதே கட்சியினருடன் தற்போது கூட்டணி சேர்ந்துள்ளார்.மாற்றம், முன்னேற்றம் என்று கூறி வந்தவர் தற்போது தடுமாற்றத்தில் உள்ளார். பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள், கோவையில் சிறுமிபலாத்காரம் செய்யப்பட்டு கொலை என தமிழகத்தில் மகளிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழக மக்கள் புயல் பாதிப்பில் சிக்கியபோது வந்து பார்க்காத பிரதமர் மோடி தேர்தலுக்காக தமிழகத்துக்கு வருகிறார். மக்கள் விரோத ஆட்சி தரும் மோடியை வீழ்த்த, வரவிருக்கும் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள். இவ்வாறு பேசினார். தொடர்ந்து அரியகுளம், திப்பம்பட்டி, காரிமங்கலம், இண்டூர், பென்னாகரம், பாப்பி ரெட்டிப்பட்டி, பாலக்கோடு, வெள்ளிச்சந்தை ஆகிய இடங்களிலும் பிரச்சார கூட்டங்களில் பங்கேற்று திமுக வேட்பாளர்களை ஆதரிக்க வலியுறுத்தி பேசினார்.

;