tamilnadu

பென்னாகரம் அருகே காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

பென்னாகரம், மே 28-பென்னாகரம் அடுத்துள்ள சிகரஅள்ளி பகுதியில் ஆடு மேய்க்கச் சென்றவர் காட்டு யானை தாக்கி பலியான சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், சிகரஅள்ளி பகுதியைச் சார்ந்தவர் மாணிக்கம் (50). மனைவி செல்வி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர்அப்பகுதியில் உள்ள ஏரியூர் வனப்பகுதியில் ஆடு மேய்க்கும்தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் வனப்பகுதியில் குட்டியுடன் பெண் யானை நடமாட்டம் இருந்து வந்தது.திங்களன்று மதியம் குட்டியுடன் இருந்த தாய் யானை தாக்கியதில் ஆடு மேய்க்க சென்ற மாணிக்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மேலும், உடன் ஆடு மேய்க்க சென்ற மற்ற நபர்கள் தப்பி வந்து தகவல் அளித்ததன் பேரில் ஊர் பொதுமக்களும், ஏரியூர் காவல்துறையினர், வனத்துறையினர் சென்றுஅவரது உடலை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.ஏரியூர்ப் பகுதியில் யானை மிதித்து ஆடு மேய்ப்பவர் பலியான சம்பவம் அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

;