tamilnadu

img

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்பு

தருமபுரி, ஜன. 27- குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி சமூக நல்லி ணக்க மேடையின் சார்பில் தருமபுரி, அரூரில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தருமபுரி நான்கு வழிச்சாலையில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் திமுக மாவட்டச் செயலா ளர் தடங்கம் பெ.சுப்பிரமணி ஒன்றிய செயலாளர் சேட்டு, நிர்வாகிகள் பொன்மகேஸ்வரன், ரேனுகாதேவி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.குமார், மாவட் டச் செயற்குழு உறுப்பினர் டி.எஸ். ராமச்சந்திரன், ஒன்றியசெயலாளர் என்.கந்தசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் தா. ஜெயந்தி, மாநில பொதுக்குழு உறுப் பினர் ராமன், மனித நேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் யாசின் தென்றல் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற் றினர். இதேபோல் அரூரில் நடைபெற்ற  நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஆர்.மல்லிகா, மாவட்டக்குழு உறுப்பினர் சி.வேலாயுதம் மற்றும் பி.சங்கு, கே. என்.ஏழுமலை, விடுதலை சிறுத்தை கள் கட்சியின் மேற்கு மாவட்ட செய லாளர் கி.ஜானகிராமன் ஆகியோர் பங் கேற்றனர்.

;