tamilnadu

ஒகேனக்கல் அருவியில் குளித்தவர் நீரில் மூழ்கி பலி

பென்னகரம், ஜூலை 30- ஒகேனக்கல் அருவியில் நண்பர்களோடு குளித்த வாலிபர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த கரடிகுப்பம் பகுதியை  சேர்ந்தவர்  பிரபு (25).  இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந் நிலையில் தனது நண்பர்களோடு ஒகேனக் கல் சுற்றுலா வந்து, சின்னாறு அருகே ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப் போது எதிர்பாராத விதமாக சூழலில் சிக்கி ஆற்றில் அடித்து செல்லப்பட்டு பரிதாப மாக உயிரிழந்தார். இதுகுறித்த தகவலறிந்த ஒகேனக்கல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்க்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக பென்னாகரம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக பென்னாகரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

;