தருமபுரி, ஜூன் 7- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின் மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணி யத்தை பணி ஓய்வு நாளன்று பணி நீக்கம் செய்ததை கண்டித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங் கம் சார்பில் கருப்புபேட்ஜ் அணிந்து போராட்டம் நடைபெற்றது. தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசி ரியர்கள், ஊரக வளர்ச்சித்துறை அலு வலர்கள் உள்ளிட்ட அனைத்துதுறை ஊழியர்களின் நலனுக்காக போராடிய அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியத்தை அரசு பணியிலிருந்து ஓய்வுபெறும் நாளில் அரசாணைகள் மற்றும் நீதிமன்ற தீர் பாணைக்கு முரணாக தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இச் செயலை வன் மையாக கண் டிப்பதுடன் தற்காலிக பணி நீக்கத்தை திரும்பபெற தமி ழக அரசை வலி யுறுத்தி தமிழ் நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் தருமபுரி மாவட்டம் முழு வதும் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கருப்புபேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்
இதேபோல், சேலம் மாவட்டம் முழுவதும் ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சங்கத்தின் மாநிலத் துணைத் தலை வர் திருவரங்கன், மாவட்ட செயலா ளர் ஜான் ஆன்ஸ்ட்டீன், தலைவர் வாசு தேவன், செயற்குழு உறுப்பினர் வடி வேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.