tamilnadu

லஞ்ச வங்கிய நில அளவையருக்கு சிறை

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு தனது நிலத்தை அளவீடு செய்வதற்காக அப்போதைய நில அளவையர் சிவக்குமார் என்பவரை அணுகியுள்ளார். ஆனால் அவர், நிலத்தை அளவீடு செய்வதற்காக ரூ.5 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் எனக் கோரியுள்ளார். இதுகுறித்துராஜா ஊழல்தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் அளித்த ஆலோசனையின் பேரில்,ரசாயனம் தடவிய ரூ. 2 ஆயிரத்து 500ஐ நிலஅளவையாளரிடம் அளித்துள்ளார். அதனை அவர் பெறும்போது, அங்கிருந்த ஊழல் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் நிலஅளவையர் சிவக்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை தருமபுரி தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இவ்வழக்கு விசாரணை முடிவில் நிலஅளவையர் சிவக்குமாருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

;