கஜா புயல் கோர தாண்டவத்தின் தாக்கம்
புதுக்கோட்டை, செப்.23- கஜா புயலில் அனைத்தையும் இழந்தாலும் மரத்தின் மீது தீராத காதலோடு வாழ்ந்து வரும் விவசாயி களின் பண்பு அனைவராலும் பாராட்டத் தக்கது. கடந்த வருடம் வீசிய கஜா புயலில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங் களில் புதுக்கோட்டையும் ஒன்று. வீடுகள், ஆடு, மாடுகள், உடமைகள் மற்றும் சாகுபடிகளை இழந்தாலும் விவசாயிகளுக்கு அதிகம் பாதிப்பை ஏற்படுத்தியது மரங்கள்தான். ஒரு வருடம் முதல் நூறு வருடங்களுக்கும் மேலாக பராமரித்த வளர்த்த பல லட்சக் கணக்கான மரங்களை விவசாயிகள் இழந்தனர். இதனால், உடனடியான பாதிப்பு மட்டுமல்லாது அடுத்த சில வருடங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மரங்களின் இழப்பு அவர்களைப் பாதித்துள்ளது.
இவ்வளவு பாதிப்புக்கு மத்தியிலும் இவர்களுக்கு மரங்களின் மீதான காதல் குறையவில்லை. இழந்த மரங் களை எப்படியாவது மீண்டும் உரு வாக்கிவிட வேண்டுமென அயராது பாடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் மேற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் வீர மணி(38). தனது வீட்டு வாசலில் மரங் கள், பூ கன்றுகளை வளர்த்து வருகிறார். வீட்டின் மேல் கூரையில் இருந்து வரும் மழைத் தண்ணீரை பெரிய தொட்டி யில் சேமித்து குடிக்கவும், வீட்டுத் தேவைகளுக்கும் பயன்படுத்துவதுடன் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி மரங்கள், செடிகளையும் வளர்த்து வரு கிறார். இவரது இந்த மழைநீர் சேமிப்பு மற்றும் தண்ணீர் சிக்கனத்தை அதி காரிகள் ஆய்வு செய்து பாராட்டியது டன் குடியரசு தினத்தில் மாவட்டக் கலெக்டர் உமாராணி பாராட்டு சான்றும் வழங்கி பாராட்டினார். இந்நிலையில், தனது வீட்டின் முன்பு தாழ்வாரம் அமைத்து விரிவு செய்ய திட்ட மிட்டார். ஆனால் வீட்டு வாசலில் நின்ற சாத்துகுடி மரம் விரிவாக்கத்திற்கு இடையூறாக இருந்தது. அதனால், கட்டிடப் பணிக்கு வந்தவர்கள் மரத்தை வெட்டி அகற்றிவிடலாம் என்ற னர். 5 வருடங்கள் தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்த மரத்தை வெட்டி அழிக்க விரும்பாத வீரமணி மாற்று வழியைக் கையாண்டார்.
மரத்தை சுற்றி மண்ணை அள்ளி விட்டு தண்ணீரை ஊற்றிக் கொண்டே மரத்தில் மரக்கம்புகளை கட்டி ஜாக்கி வைத்து ஏற்றிய போது ஈரத் தோடு மரத்தின் வேர்கள் பாதிப்பு இல்லா மல் வெளியே வந்தது. இளைஞர்கள் சிலரின் உதவியுடன் வேரோடு பிடுங்கப் பட்ட சாத்துக்குடி மரத்தை மாற்று இடத்தில் தயாராக வெட்டப்பட்டிருந்த குழியில் நட்டு தண்ணீர் ஊற்றினார். சில நாட்கள் கடந்தும் மரத்தின் இலைகள் கூட வாடவில்லை. எளிய முறையில் ஒரு மரத்தை வேரோடு இடம் மாற்றம் செய்திருப்பதை அப்பகுதி பொது மக்கள் பாராட்டினார்கள். இது குறித்த கொத்தமங்கலம் பகுதி இளைஞர்கள் கூறும்போது பல இடங்களிலும் மரங்களின் அருமை தெரியாமல் வெட்டி அழித்தும், தீ வைத்து எரித்தும் வருகிறார்கள். ஆனால் தற்போது கஜா புயலால் பல கோடி மரங்கள் அழிந்த பிறகு மரங் களின் அருமை தெரிய வந்துள்ளது. அத னால் தான் தற்போது இளைஞர்கள் நீர்நிலைகளை சீரமைத்து அதில் பனை முதல் பல வகையான மரக்கன்று களையும் நட்டு பராமரித்து வருகிறோம். பல இடங்களில் குறுங்காடுகளும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இளைஞர் வீரமணி செய்திருப்பது பாராட்டத்தக்கது. இன்னும் 5 வருடங் களில் புயலில் இழந்த மரங்களை விட பல மடங்கு மரங்களை உருவாக்கு வோம் என்றனர்.
மதி