tamilnadu

img

புதுச்சேரியில் தியாகிகள் தினம்

புதுச்சேரி,ஜூலை 30- புதுச்சேரி ஜூலை 30 தியாகி களுக்கு சிஐடியு உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் இயக் கத்தின்  மறைந்த முதுபெரும் தலைவர் வ.சுப்பையா தலை மையில் நடைபெற்ற பஞ்சாலை தொழிலாளர்கள் போராட்டத்தில் 12 தொழிலாளர்களை பிரெஞ்சு அரசு சுட்டுக் கொன்றது. அந்த தியாகிகளின் போராட்டம் ஆசிய கண்டத்தில் 8 மணி நேர  வேலை உரிமைக்கு வித்திட்டது.  அதனைத் தொடர்ந்து பிரெஞ்சு  அரசு 8 மணி நேர வேலை என்பதை அதிகாரப் பூர்வமாக அறிவித்தது. அந்த தியாகிகளுக்கு ஆண்டுதோறும் ஜூலை 30 அன்று புதுச்சேரி தொழிலாளர்கள் மலர் வளை யம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். புதுச்சேரி-கடலூர் சாலை யில் அமைக்கப்பட்டுள்ள தியாகி களின் சிலைக்கு  ஜூலை 30 ஆம்  தேதி சிஐடியு சார்பில் மலர்  வைத்து அஞ்சலி செலுத்தப்பட் டது. பிரதேசத் தலைவர் கே. முருகன் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்ச்சியில்  சிபிஎம் பிரதேசச் செயலாளர் ஆர்.ராஜாங்கம், தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் வெ.பெருமாள், சிஐடியு பிரதேசச்  செயலாளர் சீனுவாசன், பொருளாளர் பிரபு ராஜ், நிர்வாகிகள் ரவிச்சந்திரன், கலியன், மதிவாணன் மற்றும்  தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் தலைவர் நிலவழகன், பொதுச் செயலாளர் ராமசாமி உட்பட திரளானோர் பங்கேற்று தியாகிகளின் சிலைக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதேபோல் ஏஐடியுசி உள்  ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங் கள் சார்பிலும் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.