tamilnadu

ஜூன் 1 முதல் தமிழகத்தில் ரயில் சேவை

மதுரை, மே. 30- ஜூன் 1 முதல் தமிழகத்தில் ரயில் சேவை தொடங்குகிறது. கொரோனா நான்காம் கட்ட ஊரடங்கு நிறைவு பெற உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- கோயம்புத்தூர் -மயிலாடுதுறை-கோயம்புத்தூர் இடையே இயக்கப்படும் ஜன்சதாப்தி சிறப்பு ரயில் செவ்வாய்க் கிழமை தவிர மற்ற நாட்களில்  இயக்கப் படும்.கோயம்புத்தூரில் காலை7.10 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மதியம் 1.40 மணிக்கு மயிலாடுதுறையை சென்ற டையும்.  மறுமார்க்கத்தில் மதியம் 2.50 மணி க்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு கோயம் புத்தூர் சென்றடையும்  மதுரை-விழுப்புரம்-மதுரை அதி விரைவு சிறப்பு ரயில் மதுரையிலிருந்து  காலை 7 மணிக்கு புறப்பட்டு பகல் 12.05 மணிக்கு விழுப்புரம் வரும். மாலை 4 மணிக்கு புறப் பட்டு  இரவு 9.20 மணிக்கு மதுரை சென்றடை யும்.  திருச்சிராப்பள்ளி-நாகர்கோவில்-திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர்-காட்பாடி -கோயம்புத்தூர் இடையேயும் அதிவிரைவு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

;