tamilnadu

img

டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு இன்று தொடக்கம்

சென்னை,ஆக.31- வி.ஏ.ஓ., இளநிலை உதவி யாளர், வரி வசூலிப்பவர், நில அளவையாளர், தட்டச்சர் உள்ளிட்ட அரசுத்துறை பதவிகளுக்கான குரூப் - 4  தேர்வு என்ற பெயரில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.  நடப்பாண்டு குரூப் - 4 தேர்விற்கான அட்ட வணையை டிஎன்பிஎஸ்சி ஆணையம் கடந்த ஜூன் மாதம் அறிவிப்பு வெளி யிட்டது. கிராம நிர்வாக அலு வலர் - 397, இளநிலை உதவி யாளர் - 2 ஆயிரத்து 688, தட்டச்சர் - 1,901, சுருக்கெ ழுத்து தட்டச்சர் - 784  என மொத்தம் 6 ஆயிரத்து 491 பணியிடங்களுக்கான குரூப் - 4 ஞாயிறன்று நடை பெறுகிறது.  இதற்கான நுழைவுசீட்டு (ஹால் டிக்கெட்) டிஎன்பி எஸ்சி இணைய தளத்தில் ஏற்கெனவே வெளியிடப் பட்டுள்ள நிலையில், 301 தாலுகாக்களில் சிறப்பு தேர்வு மையம் அமைக்கப் பட்டுள்ளது. 

குரூப் - 4 தேர்வுக்கான விதிமுறைகள்  

காலை 10 மணிக்கு தொடங்கி 1 மணிக்கு தேர்வு வரை நடைபெறும் இந்த தேர்விற்கு நுழைவுசீட்டு, நீலம் அல்லது கருப்பு நிறத்திலான பந்துமுனை பேனா போன்றவைகளை மட்டுமே தேர்வு அறைக்குள் எடுத்து வர வேண்டும். இதை தவிர வேறு எந்த பொருட்கள் கொண்டுவரக் கூடாது. தேர்வு அறைக்கு 30 நிமிடம் தாமதமாக வருப வர்கள் தேர்வு எழுத அனு மதிக்கப்பட மாட்டார்கள். விதியை மீறுவோர் எதிர்கா லத்தில் நடத்தப்படும் தேர்வு களில் பங்கேற்க தகுதி யற்றவர்களாக கருதப்படு வார்கள்.  தேர்வு அறையில் தடை செய்யப்பட்ட செல்போன் கள் மற்றும் இதர பொருட்கள் அனைத்தும் விண்ணப்ப தாரர்கள் தேர்வுக்கூடத்துக்கு வெளியே தான் வைக்க வேண்டும்.அந்தப் பொருள்க ளின் பாதுகாப்புக்கு உத்தர வாதம் தர இயலாது என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எச்சரித்துள் ளது என்பது குறிப்பிடத் தக்கது.