tamilnadu

img

வெளி மாநில தொழிலாளர்கள் பயணச் செலவை தமிழக அரசே ஏற்கும்

சென்னை, மே 9- பிற மாநிலங்களில் தவித்தும் வரும் தமி ழக தொழிலாளர்களை அழைத்து வருவ தற்காக சிறப்பு அதிகாரியாக அதுல்யா மிஸ்ரா நியமிக்கப்பட்டார். அதனோடு சேர்த்து ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனி யன் பிரதேசங்களோடு தொடர்பு கொண்டு  தமிழர்களை மீட்டு கொண்டு வரவும், தமி ழகத்தில் உள்ள பிற மாநிலத்தவர்களை அவர்களது சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கவும் மாநில வாரியாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அதேபோல் வெளி மாநிலத்தவர்களை அவர்களது சொந்த மாநிலத்துக்கு அனுப்புவதற்கான வழிகாட்டுமுறைகளை தமிழக அரசு பிறப்பித்த தோடு, அதுல்ய மிஸ்ராவுடன் இணைந்து பணியாற்ற மாநில அளவில் ஒரு குழு அமைத்து அர சாணை பிறப்பித்தது.

அதில், ரயில் மூலம் அனுப்பப்படும் வெளி மாநிலத்தவர்களின் செலவை சம்பந்தப்பட்ட மாநிலம் ஏற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டி ருந்தது. தற்போது அந்த ஷரத்தில் திருத்தம் செய்யப்பட்டுள் ளது. சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் செலவை ஏற்க முடியாதபட்சத்தில், தமிழக  அரசே ஏற்கும் எனவும், இதற்கான தொகை  மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து  எடுத்து கொள்ளப்படும் எனவும் திருத்தம்  செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறி விப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.