தரங்கம்பாடி, மே 18-நாகை மாவட்டம் சீர்காழிமாதானம் முதல் மேமாத்தூர்வரை 30 கி.மீ தொலைவிற்கு ஷேல் கேஸ் கொண்டு செல்ல ராட்சச குழாய்களை கெயில் நிறுவனம்(ஓ.என்.ஜி.சி) பதித்து வருகிறது. ஆயிரக்கணக்கான விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி காவல்துறை துணையுடன் அராஜகமான முறையில் குழாய்களை தீவிரமாக பதித்து வருகிறது.தரங்கம்பாடி வட்டம் காளகஸ்திநாதபுரம், முடிகண்டநல்லூர், உமையாள் புரம் பகுதிகளில் விவசாயிகள் எதிர்ப்பையும் மீறியும்,அவர்களை மிரட்டியும் நடைபெறும் இப்பணிகளை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின்மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், மத்திய, மாநில அரசுகளின் இந்த அடக்குமுறை நடவடிக்கையை விவசாயிகள் சங்கம் கடுமையாக கண் டிக்கிறது.குறுவை சாகுபடி செய்யப்பட்ட வயல்களில், காய்கள் காய்த்துள்ள பருத்திவயல்களை நாசமாக்கி கெயில் நிறுவனம் குழாய் களை பதித்து வருகிறது. நடவுக்கு தயாராக உள்ள நிலங்களை தோண்டி பாழாக்கி வருகிறது. விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்கிற விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும்இச்செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. கர்நாடகா, கேரளா மாநிலங்களில் கெயில் நிறுவனம் சாலையோரங்களில் குழாய்களை பதிக்கிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் திட்டமிட்டுவிளை நிலங்களில் பதிக்கிறது.
மேற்கு மாவட்டங்களான கோவை, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் விளை நிலங்களில் குழாய்களை பதிக்க முயன்ற போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதற்கு தடை விதித்தார். இதுவரை அந்த மாவட்டங்களில் குழாய்கள் பதிக்கவில்லை ஆனால் காவிரி டெல்டா பகுதி விளை நிலங்களில் எடப்பாடி அரசு குழாய்களை பதிக்க அனுமதியளித்துள்ளது. எந்த ஒரு கருத்துக்கேட்பு கூட்டங்களையும் நடத்தாமல் விவசாயிகளை ஒடுக்கும்விதமாக இப்பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டால், அதனால் ஏற்படும் இழப்புகளை நில உரிமையாளரே ஏற்கவேண்டும். தவறும் பட்சத்தில்8 முதல் 10 ஆண்டு வரைவிவசாயிக்கு சிறை தண் டனை, குழாய் பதித்த நிலப் பகுதியில் மரங்கள் நடவோ, வீடுகளை கட்டவோ கூடாது என்கிற ஷரத்துக்கள் உள்ள நிலையில் அதையெல்லாம் விவசாயிகளிடம் கூறாமல் வலுக்கட்டாயமாக விவசாயிகளை ஏமாற்றி குழாய்களை பதிப்பதாகவும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.மேலும் விளை நிலங்களில் குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களின் நிலங்களில் இறங்கி போராட்டம் நடத்திய 6 பேர்மீது வன்முறையை தூண்டியதாக வழக்குப்பதிவு செய் துள்ள செம்பனார்கோவில் காவல்துறை ஒருவரை கைதுசெய்துள்ளதை கண்டித்துள் ளார். விரைவில் இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங் கம் சார்பில் மாபெரும் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக எஸ்.துரைராஜ் கூறியுள்ளார். இதற்காகபோராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.