tamilnadu

img

சிறப்பு ரயில்கள் பட்டியலில் தமிழகத்திற்கு ஒன்றுமில்லை

சென்னை, மே 21- கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊர டங்கு அமல்படுத்தப்பட்டு பொதுப் போக்குவரத்து முடக்கப்பட்டது. இதனால், ரயில், பேருந்து சேவை  ரத்து செய்யப்பட்டது. தற்போது, புலம் பெயர்  தொழிலாளர்களுக்காக மட்டும் சிறப்பு ரயில்களை  நாடு முழுவதும் ரயில்வே இயக்கி வருகிறது.  இந்த நிலையில்,  ஜூன் 1ம் தேதி முதல் வழக்  கத்தில் உள்ள கால அட்டவணைப்படி ஏசி அல்லாத  ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே மந்திரி பியூஷ் கோயல் அண்மையில் தெரிவித்தார்.  அதன்படி ஏசி வசதி இல்லாத, தேர்வு  செய்யப்பட்ட 200 ரயில்களை நாடு முழுவதும்  இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 200 ரயில்க ளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.  அதில் தமிழகத்திற்கான எந்த ரயில் சேவையும் இடம்பெறவில்லை. 200 ரயில்களுக்கான இணைய தள டிக்கெட் முன்பதிவு வியாழக்கிழமை காலை தொடங்கிய. இந்த ரயில்களில் டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமாக மட்டுமே முன்பதிவு செய்யப்படும். ஆர்.ஏ.சி,  காத்திருப்போர் பட்டியலுக்கான டிக்கெட்டுகள் கிடைக்கும். எனினும், காத்திருப்போர் பட்டிய லில் உள்ளவர்கள் ரயில்களில் பயணம் செய்ய எக்கா ரணம் கொண்டும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.