சென்னை, ஏப்.28- தமிழக காவல் துறைக்கு புதிததாக தேர்ந்தெடுக்கப்பட்ட 8 ஆயிரத்து 538 இரண்டாம் நிலை காவலர்களை கொரோனா பரிசோதனைக்குட்படுத்தி உடனடியாக ஊரடங்கு பணிகளில் ஈடுபடுத்த காவல் துறை பயிற்சி டிஜிபி கரன் சின்ஹா உத்தரவிட் டுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் நாடு முழுவதும் தீவிரமடைந்து வருவதால் நாளுக்கு நாள் பாதிப்பு, உயிரிழப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் நிறைவடைய இருந்த ஊரடங்கு மே 3 ஆம் தேதி வரை நீடிக்கப்படுவ தாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
அதன்படி தமிழகத்தில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் மக்கள் வீடுகளி லேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி இருந்தாலும் கொரோனா பாதிப்பு தினந்தோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் குணமடைந்த வர்களின் எண்ணிக்கையும் ஒருபக்கம் உயர்ந்து கொண்டே செல்கிறது.
தற்போது பணியில் உள்ள காவல்துறையின ருக்கும் கொரோனா தொற்று பரவி வருவதால் பாதுகாப்புப் பணியில் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன்பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குரூப் 4 தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட் டுள்ளது. அதன்படி மே 3 ஆம் தேதி அவரவர் தேர்வு செய்யப்பட்ட மாவட்டங்களில் உயரதிகாரி கள் முன்னிலையில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.