tamilnadu

img

தயாநிதி மாறனுக்கு எதிராக தமிழக அரசு அவதூறு வழக்கு

சென்னை, பிப். 21- டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் அமைச்சர்  ஜெயக்குமாரை தொடர்புபடுத்தி பேசிய விவ காரத்தில் திமுக எம்.பி. தயாநிதி மாறன் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது. கடந்த 31ஆம் தேதி வெளியான நாளிதழ் செய்தி யில், டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஜெயக்குமா ருக்கு தொடர்பு இருப்பதாகவும், சிபிஐ விசாரணைக்கு  உத்தரவிட்டால் உண்மை வெளிவரும் என்றும் தயா நிதிமாறன் கூறியதாக கூறப்பட்டிருந்தது.  இதுதொடர்பாக அமைச்சர் சார்பில் சென்னை யில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தமிழக அரசு  அவதூறு வழக்கு தொடர்ந் துள்ளது. அதில் தயா நிதி மாறன் ஆதாரம் இல்லாமல் உண்மைக்கு புறம்  பாக உள்நோக்கத்துடன் பேசியுள்ளதாகவும், அவர்  மீது அவதூறு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க  உத்தரவிட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள் ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும்  என எதிர்பார்க்கப்படுகிறது.