கும்மிடிப்பூண்டி, ஜூலை-26 இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ் மாநிலக்குழுவின் மாநில அளவிலான பயிலரங்கம் ஜூலை 26,27,28-ஆகிய மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இந்த பயிலரங்கம் திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வெள்ளியன்று (ஜூலை 26) துவங்கியது. இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் வி.பி.சானு பயி லரங்கத்தை தொடங்கிவைத்துப் பேசினார். சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன் தலைமை தாங்கினார். திரு வள்ளூர் மாவட்டச் செயலாளர் என்.தினேஷ் வரவேற்றார்.
மாநில செயற்குழு உறுப்பினர் எம்.திவ்யபாரதி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். “தேசிய கல்வி கொள்கை வரைவு அறிக்கை ஏன் நிராகரிக்கப்பட வேண்டும்” என்ற தலைப்பில் பொதுப் பள்ளிகளுக் கான மாநில மேடை என்ற அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கருத்துரை வழங்கினார். “சுதந்திரப் போராட்டத்தில் இளை ஞர்கள் பங்கு” என்ற தலைப்பில் ச.லெனின் கருத்துரை வழங்கினார்.மாநிலச் செய லாளர் வீ.மாரியப்பன், மத்தியக் குழு உறுப்பினர்கள் சத்யா, நிருபன், மாநில துணைத் தலைவர் பிரதாப் ஆகியோர் பேசினர். தொடர்ந்து சனி, ஞாயிறன்றும் பயி லரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில் தமுஎகச மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா, பேராசிரியர் சுந்தரவள்ளி, தீக்கதிர் மதுரைபதிப்பு பொறுப்பாசிரியர் எஸ். பி.ராஜேந்திரன் ஆகியோர் உரையாற்ற உள்ளனர்.