tamilnadu

img

பழைய சொத்துவரி வசூலிக்க உத்தரவு

சென்னை,நவ.22- புதிய சொத்துவரி குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதால், பழைய சொத்துவரி கணக்கீட்டின்படி நிலுவையில் உள்ள பழைய பாக்கியை கணக்கிட்டு வசூலிக்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சொத்துவரி உயர்த்தப்பட்டது குறித்து மறு ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்திருந்தார்.  இந்நிலையில், சென்னையில் மக்கள் தங்களின் பழைய சொத்து வரியையே செலுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. 2019-20 ஆம் நிதியாண்டிற்கான முதல் அரையாண்டில் சென்னை மாநகராட்சி 602 கோடி ரூபாய் சொத்து வரி வசூலித்துள்ளதாகவும், வரி உயர்வு திரும்ப பெறப்பட்டால் இரண்டாம் அரையாண்டில் அதன் தொகை குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.