tamilnadu

img

‘சோசலிச பொருளாதாரத்தை கொண்டு வருவோம்’

உறுதியோடு முன்னேற அ.சவுந்தரராசன் அழைப்பு

சென்னை, அக். 21- ஏழை-எளியோர், தொழி லாளர்களின் குரலாய் கம்யூ  னிஸ்ட் இயக்கம் மட்டுமே  இருக்கும் என்று அ.சவுந்தர ராசன் தெரிவித்தார். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் 100ஆம் ஆண்டு துவக்க விழா வட சென்னை மாவட்டக் குழு சார்பில் ஞாயிறன்று (அக். 20)  நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ராம கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மாவட் டச் செயலாளர்கள் எல்.சுந்தர்  ராஜன் (வடசென்னை), ஏ. பாக்கியம் (தென்சென்னை), எஸ்.கோபால்(திருவள்ளூர்), மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஜி.மூர்த்தி நன்றி கூறினார். முன்னதாக திருவிக நகர் பகுதிச் செயலாளர் செல்வராஜ் வரவேற்றார்.  இதில் பங்கேற்ற மத்தி யக்குழு உறுப்பினர் அ.சவுந்தர ராசன் பேசியதன் சுருக்கம் வரு மாறு:-

கம்யூனிஸ்ட் இயக்கம் கடந்த 100 ஆண்டுகளில் செய்த  அளப்பரிய தியாகம், அது  சாதித்திருக்கிற சாதனைகளை யும் நாம் மீண்டும் மறு வாசிப்புள்ளாக்கி மக்கள் மத்தி யில் எடுத்துச்செல்ல வேண்டும்.  நாட்டிலுள்ள அனைத்து கட்சி களும் இன்றைக்கு முன் வைக்கக் கூடிய முழக்கங்கள் கம்யூனிஸ்டுகளிடமிருந்து களவாடப்பட்டவை. உலகம் முழுவதும் தற்போது நடை முறைப்படுத்தப்படும் நலத் திட்டங்கள் அனைத்தும் சோவியத் ஒன்றியத்தில் கம்யூ னிஸ்ட் கட்சி தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு அங்கு  அமல்படுத்தப்பட்ட நலத் திட்டங்களே. பொதுத்துறை, ஓய்வூதியம், கல்வி, குழந்தை கள் நலன், முதியோர் நலன்  என அனைத்தும் மேலை நாடு களில், ஐரோப்பிய நாடுகளில் அமல்படுத்தப்பட்டதற்கு மூலக்  காரணமே சோவியத் யூனி யூனியன்தான்.

மேலை நாடுகளில் அமல்  படுத்தப்பட்ட நலத்திட்டங்கள் இப்போது ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு வருகிறது. வலது சாரிக் கொள்கைகளுக்கு எதி ராக மக்கள் திரும்புகிறார்கள். அவர்களை திசை திருப்ப ஆட்சி யாளர்களால் இனவெறி தூண்டப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, அமெரிக்கர் அல்லாதவர்க ளுக்கு அமெரிக்காவில் வேலை இல்லை என்று பிரச்சாரம் செய்தார். அதுதான் அவ ரது வெற்றிக்கு உதவியது. டிரம்ப் ஜனாதிபதியாக பதவி யேற்ற பிறகு அங்கு புதிய  வேலை வாய்ப்புகள் உருவாக  வில்லை. மாறாக, வாகன  உற்பத்தி மற்றும் உதிரிபாகங் கள் உள்ளிட்ட பல ஆலை களுக்கு மூடுவிழா செய்யப் பட்டன. மீண்டும் பொதுத்துறை களை உருவாக்க வேண்டும் என  மக்கள் கோரிக்கை விடுக்கி றார்கள். சில நாடுகளில் போராடி வருகிறார்கள். வலது சாரிக் கொள்கைகள் நீண்ட நாள் நீடிக்காது. சோவியத் யூனி யன் வீழ்ந்த பிறகும் கூட  பல நாடுகளில் கம்யூனிஸ்டு கள் ஆட்சிக்கு வந்து கொண்டி ருக்கிறார்கள். 

சீனா சோசலிச சந்தையை உருவாக்கியுள்ளது. அமெ ரிக்காவை விட பல மடங்கு அந்நிய செலாவணியை கூடுத லாக வைத்துள்ளது. அத னால்தான் அமெரிக்கா சீனா வுக்கு எதிராக கடுமையான வரி விதிக்கிறது. ஒரு நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதித்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்ப தற்கு உதாரணம் ஈரான். அங்கு  சத்தான உணவு, மருந்து, மாத்திரைகள்கூட கிடைக்கா மல் 15 லட்சம் குழந்தைகள் செத்து மடிந்தன.  அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பல நாடுகள் மீது பொரு ளாதார தடையை விதித்து வருகிறார். பொருளாதாரத் தடை என்பது அந்த நாட்டின் மீது தொடுக்கப்படும் மறைமுக போராகும். ஆனால் சீனா உள்ளிட்ட கம்யூனிஸ்ட் நாடுகள் எந்த நாட்டின் மீதும் பொருளா தார தடை விதித்ததில்லை. இதை நாம் மக்களிடத்திலே எடுத்துக் கூற வேண்டும்.

புதிய தாராளமயக் கொள்கையை சோசலிச பொரு ளாதாரமாக அமல்படுத்தியது சீனா. அதனால்தான் அந்த  நாட்டில் மிச்சம் என்பது  சமூகத்திற்கும், தொழிலாளர்க ளுக்கும், நிறுவன வளர்ச்சிக் கும் பகிர்ந்தளிக்கும் வகையில் அமல்படுத்தப்பட்டது. அதன் பொருளாதார வளர்ச்சி மிக வேகமாக உயர்ந்தது.  ஆனால், புதிய தாராளமயக்  கொள்கையை அமல்படுத்தும் இந்தியா போன்ற நாடுகளில்  வறுமையும் ஒழிந்துவிட வில்லை. ஏற்றத்தாழ்வும் குறையவில்லை. பொருளா தார வளர்ச்சியும் ஏற்பட வில்லை. தொழிலாளர்களின், ஏழை எளிய மக்களின் ஆன்மாவாக, அவர்களின் குரலாய் கம்யூனிஸ்ட் இயக்கம் மட்டும்தான் இருக்க முடியும். பல அடக்குமுறைகளை கடந்து கம்யூனிஸ்ட் இயக்கம்  இந்தியாவில் சந்தித்திருக்கி றது. இந்த 100 ஆண்டுகளில் நாம் ஏராளமாக சாதித்தி ருக்கிறோம். இந்தியாவிலும் சோசலிச பொருளாதாரத்தை கொண்டு வருவோம் என்ற உறுதியோடு நாம் தொடர்ந்து முன்னேறுவோம்,வெற்றி பெறுவோம். இவ்வாறு சவுந்தரராசன் பேசினார்.