பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழக ஆளுநருக்கு ஒரு லட்சம் அஞ்சல் அட்டைகளை அனுப்பும் போராட்டத்தை திங்களன்று தமிழகம் முழுவதும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்தியது. சென்னையில் இப்போராட்டத்தை பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் துவக்கி வைத்தார். மாநிலச் செயலாளர் எஸ்.பாலா, துணைச் செயலாளர் சி.பாலச்சந்திர போஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.