tamilnadu

img

உள்ளாட்சிகளுக்கான நிதிப்பகிர்வை அதிகரிக்க திமுக வலியுறுத்தல்

சென்னை, மார்ச் 16- மாநில அரசின் வருவாயில் உள்  ளாட்சிகளுக்கு ஒதுக்கப்படும் நிதிப் பகிர்வை அதிகரிக்க வேண்டும் என்று திமுக கொறடா அர.சக்கரபாணி வலி யுறுத்தினார். சட்டப்பேரவையில் திங்களன்று (மார்ச் 16) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, சிறப்புத்  திட்டங்கள் செயலாக்கத்துறை ஆகிய  மானியத்தின் மீது விவாதம் நடை பெற்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய அர.சக்கரபாணி, தமிழ்நாடு குடி நீர் வடிகால் வாரியத்தில் அனுமதிக்கப்  பட்ட ஊழியர்களில் 25 விழுக்காடு அள விற்கே உள்ளனர். வாரியத்தை அரசு தனியார்மயமாக்க முயற்சிக்கிறது. மத்திய அரசு வழங்க வேண்டிய 6 ஆயி ரத்து 375 கோடி ரூபாயை அரசு வலி யுறுத்தி பெற வேண்டும். பசுமை வீடுகள் கட்டும் திட்டத்திற்கான தொகையை 2.10 லட்சம்  வழங்கப்படுவதை உயர்த்த  வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் 3 அல்லது  4 மாதத்திற்கு ஒருமுறைதான் ஊதியம் வழங்கப்படுகிறது என்று குற்றம் சாட்டினார்.

அதற்கு பதிலளித்த உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மத்திய அரசு நேரடியாக பயனாளி களின் வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்துகிறது. இதில் மாநில அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றார். தொடர்ந்து பேசிய சக்கரபாணி, உள்  ளாட்சிகளில் உள்ள தெருவிளக்குகளில் எல்இடி பல்புகள் பொருத்தும் பணியை  ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்றுக்கும் மேற்பட்டோருக்கு ஒப்பந்தம் வழங்க வேண்டும் என்றார்.

கோவை விமான நிலையம்

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதி திமுக உறுப்பினர் என்.கார்த்திக்  பேசும்போது, “ கோவை விமான நிலைய  விரிவாக்கம் செய்ய நிலம் கையகப்ப டுத்தாமல் உள்ளது. கோவை மாவட்டத் தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து சட்டமன்ற உறுப்பினர் களுக்கு கூட தகவல் தர மறுக்கிறார்கள். சீர்மிகு நகரங்கள் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தில் பயன்படுத்தப்படும் கட்டுமானப் பொருட்  கள் தகுதியற்றவையாக உள்ளன. நாடா ளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் வல்லுநர்களுடன் ஆலோசித்து திட்டங் களை அரசு சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, கோவை விமான  நிலைய விரிவாக்கப் பணிகளுக் கான நிலம் கையகப்படுத்தும் பணி படிப்படி யாக நடைபெற்று வருகிறது என்றார்.