சென்னை, மார்ச் 19- சட்டப்பேரவையில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அளித்த நீண்ட விளக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பேரவையில் வியாழனன்று (மார்ச் 19) கூட்டுற வுத் துறை மானியத்தின் மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் மாசிலாமணி பேசுகையில், நியாயவிலைக் கடை ஊழியர்கள் உள்ளிட்டோர் போதிய ஊதிய உயர்வின்றி நொந்து நூலாகி உள்ளனர் என்றார். அதற்கு பதிலளித்த துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, 2000ஆம் ஆண்டு முதல் வழங்கப் பட்டு வரும் ஊதிய விகிதங்களை ஒப்பிட்டு நீண்ட நேரம் பதிலளித்துக் கொண்டிருந்தார். அதற்கு திமுக உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்த பிறகும் அமைச்சர் பேசிக் கொண்டே இருந்ததால் திமுக உறுப்பி னர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால் பதிலுரையின்போது எதிர்வரிசை யில் உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரின்ஸ், ராஜேஷ்குமார், அதிமுக உறுப்பினர் கருணாஸ் ஆகியோர் மட்டுமே அமர்ந்திருந்த னர். காலி இருக்கைகளை பார்த்தவாறு கூட்டு றவுத்துறை அமைச்சரும், உணவுத்துறை அமைச்சரும் பதிலளித்து பேசினர்.