சென்னை, ஆக.25- ஐ.சி.எப் எனப்படும் ‘ஒருங்கி ணைந்த இரயில்பெட்டி தொழிற் சாலை’ கடந்த 1955-ஆம் ஆண்டில் சென்னையில் நிறுவப்பட்டு இது நாள் வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் ஆண் டுக்கு 350 இரயில் பெட்டிகள் வரை தயாரிக்க திட்டமிடப்பட்டு தொடங்கப்பட்ட இத்தொழிற் சாலையில் கடந்த 2013-14ஆம் ஆண்டில் 1,600 பெட்டிகள் தயா ரிக்கப்பட்டன. பின்னர், அது படிப் படியாக உயர்ந்து 2018-19ஆம் ஆண்டில் 3,262 பெட்டிகள் வரை தயாரிக்கப்பட்டன. மேலும், 2019-20ஆம் ஆண்டில் 4,600 பெட்டி கள் தயாரிக்கவும் திட்டமிடப்பட் டுள்ளது. இதுவரை இத்தொழிற்சாலை யில் 500க்கும் மேற்பட்ட வடி வங்களில் 60,000க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள் ளன. தற்போது, இங்கு நவீன உத்தியை பயன்படுத்தி விதவித மான இரயில் பெட்டிகள் தயா ரிக்கப்பட்டு வருகிறது. ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள பல்வேறு நாடுகளுக்கு இங்கு தயாரிக்கப்பட்ட பெட்டிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மேலும், நமது அண்டை நாடு களான இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளும் இரயில் பெட்டி கள் தயாரிப்பதற்கான ஒப்பந்தம் செய்துள்ளன.
இப்படி சிறப்பு வாய்ந்த இந்த தொழிற்சாலையில் 16,000 பேர் பணியாற்றி வந்த நிலையில், தற்போது 10,500 பேர் பணியில் உள்ளனர். மேலும் பலர் இந்த ஆலையை சார்ந்து வாழ்ந்து வரு கின்றனர். ஆனால், தற்போது மத்திய அரசு இந்த தொழிற்சாலை யை கார்ப்பரேட்மயமாக்குவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே சிறப்பாக செயல் பட்டு வந்த பி.எஸ்.என்.எல். போன்ற பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட்மயமாக்கியதன் விளைவாக அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதுடன், அந்நிறு வனமும் நிலைகுலைந்து போயு ள்ளது. இந்நிலையில் ஐ.சி.எப் நிறுவனத்தையும் கார்ப்பரேட்மய மாக்கும் மத்திய பாஜக அரசின் முடிவை உடனே கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி சென்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் பேசி னார். எனவே, அதற்கு நன்றி தெரிவித்தும், இத்தொழிற்சாலை யை கார்ப்பரேட் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை கைவிட தொடர்ந்து வலியுறுத்துமாறு கேட்டும் ஐ.சி.எப் தொழிற்சாலை யில் உள்ள ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்., சி.ஐ.டி.யு., பி.எம்.எஸ், தொ.மு.ச. மற்றும் எஸ்.சி., எஸ்.டி. சங்கத்தினர் உட்பட அனைத்து தொழிற்சங்க தலை வர்களும், சென்னையில் ஞாயி றன்று(25.8.2019) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லக்குழு அலுவலகத்தில் டி.கே. ரங்கராஜன் எம்.பி.யை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்ததோடு, இவ்விஷயத்தில் தொடர்ந்து ஆதரவு அளிக்கவும் கேட்டுக் கொண்டனர்.