tamilnadu

img

கீதாஜீவன் எம்எல்ஏ.வுக்கு சிஎஸ்ஐ திருச்சபை மக்கள் கோரிக்கை


ஊரடங்கு அமலில் இருக்கும் போது திருச்சபைக்கு செலுத்த வேண்டிய சங்க காணிக்கை, ஏலம் பாக்கி ஆகியவை செலுத்த இயலாது எனவும் இதில் தூத்துக்குடி எம்எல்ஏ., கீதாஜீவன் தலையிட்டு தகுந்த தீர்வு காணும் படி கோரிக்கை எழுந்துள்ளது.

தூத்துக்குடி தொகுதி எம்எல்ஏ., கீதாஜீவனுக்கு தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலம் அனைத்து சிஎஸ்ஐ., திருச்சபை மக்கள் விடுத்துள்ள கோரிக்கையில் தெரிவித்துள்ளதாவது, மார்ச் 22 முதல் ஏப்ரல் 14  வரை திருச்சபையில் எந்த ஆராதனையோ அல்லது கூடுகையோ நடைபெறாது  என திருச்சபையில் அறிவிப்பு செய்துள்ளார்கள். இந்திய அரசும் தமிழக அரசும் ஏப்ரல் 14 வரை மக்கள் வெளியே வர வேண்டாம் என ஊரடங்கு உத்தரவு அறிவித்துள்ளது. அப்படியானால், மக்களாகிய நாங்கள் திருச்சபைக்கு செலுத்த வேண்டிய சங்க காணிக்கை, ஏலம் பாக்கி போன்றவற்றை மார்ச் 31க்குள் எப்படி செலுத்த முடியும் ?.
மக்கள் அன்றாடம் உழைத்தால் தான் குடும்பத்தை  நடத்த முடியும் என்ற நிலையில் இருக்கும் போது31ம் தேதிக்குள் சங்க காணிக்கை மற்றும் ஏலம் பாக்கி போன்றவற்றை செலுத்தவேண்டும் என்பது மக்களுக்கு எதிரான செயல். ஆகவே தாங்கள் உடனடியாக இதில் தலையிட்டு இதற்கு தகுந்த தீர்வு காணும் படி  தூத்துக்குடி நாசரேத் திருமண்டல அனைத்து சிஎஸ்ஐ., திருச்சபை மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.