திருவண்ணாமலை, ஏப்.22- கொரோனா வைரஸ் சமூகத்தில் பரவத் தொடங்குவதற்கான ஆரம்ப கட்ட அறிகுறி கள் தென்படத் தொடங்கியுள்ளன.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யா றைச் சேர்ந்த ஒருவர் சுகாதாரதுறையில் (Health Department) பணி புரிந்து வரு கிறார். இவருக்கு வெளிநாட்டிலிருந்து வந் துள்ள இருபது பேரை கண்காணிக்கும் பணி யை மாவட்ட நிர்வாகம் வழங்கியிருந்தது. இந்த நிலையில் வெளிநாட்டு பயணிகள் யாருக் கும் கொரோனா தொற்று அறிகுறியில்லாத நிலையில் இவருக்கு மட்டும் தொற்று ஏற் பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாய் உள்ளது. சுகாதாரத்துறை பணியாளருக்கு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ராத்த மாதிரிகள் எடுக்கப் பட்டதில் அவருக்கு தொற்றிருப்பது புதனன்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து இவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் ரத்த மாதிரி களும் சேகரிக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு நாட்களில் இவரது பணிக்குறிப்பேடு, யார் யாரைச் சந்தித்தார், எங்ககெல்லாம் சென்றார் என்பதை ஆய்வுக்குட்படுத்தியுள்ளனர். திரு வண்ணாமலை மாவட்டத்தில் 13 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு வர் நலமடைந்து வீடு திரும்பிவிட்டார். பத்து பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இருவர் மட்டுமே மருத்துவமனையில் உள்ள னர். அனைத்து பாதுகாப்பு சாதனங்களுடன் உள்ள சுகாதார கண்காணிப்பாளருக்கு எப்படி தொற்று பரவியது என்பது அதிர்ச்சியாக உள்ளது.
இது குறித்து திருவண்ணாமலை ஆட்சி யர் கே.எஸ். கந்தசாமி கூறுகையில், கண்கா ணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதை நான் மிக வும் சீரியஸாகப் பார்க்கிறேன். சமூக தொற்றுப் பரவலின் ஆரம்ப கட்ட (“கீ”)த்திற்குள் சென்று விட்டோமோ என்று எண்ணத் தோன்றுகிறது என்றார்.
ஆட்சியர் இப்படிக் கூறும் நிலையில் தமி ழக முதல்வரும், சுகாதாரத்துறை அமைச்ச ரும் இன்னும் நாம் இரண்டாம் நிலையில் தான் உள்ளோம் என திரும்பத் திரும்ப கூறு கிறார்கள் என்றும் கவனிக்கத்தக்கது. “எந்தத் தவறும் செய்யாதீர்கள். நாம் நீண்ட தூரம் செல்ல வேண்டும். இந்த வைரஸ் நீண்ட காலம் நம்முடன் இருக்கும்” என்ற உலக சுகாதர நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதனோம் கூறியதை தமிழக அரசு மனதில் வைத்துக்கொள்வது நல்லது.