tamilnadu

img

தலைமைத் தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை

சட்டமன்ற இடைத்தேர்தல்


சென்னை,செப்.24- நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளின்  இடைத்தேர்தல் ஏற்பாடுகள் குறித்து காணொளிக்காட்சி மூலம் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு புதனன்று ஆலோசனை நடத்துகிறார். திருநெல்வேலி மாவட்டம்  நாங்குநேரி தொகுதி மற்றும் விழுப்புரம் மாவட்டம் விக்கிர வாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் அக்டோபர் 21 ஆம் தேதியன்று இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் ஏற்பாடுகள், மற்றும்  பாது காப்பு அம்சங்கள் குறித்து, தலைமைச் செயலகத்தில் இருந்தவாறே சத்ய பிரதா சாகு காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார். இடைத்தேர்தல் நடக்கவுள்ள இரண்டு தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் காவல்துறை கண் காணிப்பாளர்கள் இந்த ஆலோசனை கூட்டத் தில் பங்கேற்கவுள்ளனர். தேர்தல் ஏற்பாடுகள், தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிப்பது, வாகனச் சோதனையில் ஈடுபடுவது, அரசியல் கட்சியின ரின் பிரச்சாரங்களை கண்காணிப்பது, பதற்ற மான வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாது காப்பு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு விஷ யங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட வுள்ளதாக சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

;