திமுக எம்எல்ஏ பழனிவேல் தியாகராஜன் பேச்சு
சென்னை, பிப். 17- தமிழக அரசின் வருவாய் பற்றாக் குறையால் கடன் வாங்குவது அதிக ரித்து வருகிறது என்று திமுக உறுப்பி னர் பி.டி.ஆர். பழனிவேல்தியா கராஜன் கூறினார். தமிழக அரசின் 2020-21 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை மீதான விவாதம் திங்களன்று (பிப்.17) தொடங்கியது. இதில் திமுக உறுப்பினர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது: சுதந்திர இந்தியாவில் மக்களின் வாங்கும் சக்தி முன்னெப்போதும் இல்லாத வகையில் குறைந்துள் ளது. தற்போதைக்கு இந்திய பொரு ளாதாரம் மீண்டெழ வாய்ப்பே இல்லை. வாங்குவதற்கு வழியே இல்லாதபோது மத்திய அரசு நிதி கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இந்த நிதிநிலை அறிக்கை தயா ரிக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் ஆண்டுக்கு ஆண்டு கடன் சுமை உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆனால், வரு மானம் தொடர்ந்து குறைந்து கொண்டே இருக்கிறது. இதற்கு காரணம், கட்டாய (ஊதியம் போன் றவை) செலவுகளும், விருப்பச் (புதிய நல திட்ட) செலவுகளும் உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசு எதிர்ப்பார்த்ததை விட கூடுத லாக (34 விழுக்காடு) வருவாய் பற்றாக் குறை அதிகரித்துள்ளது. மத்திய அரசு நமது மாநிலத்திற்கு வழங்க தரவேண்டிய பல ஆயிரம் கோடி ரூபாய் நிலுவை வழங்காமல் உள்ள நிலையில், அந்த நிதி வரும் என்று நம்பி பட்ஜெட் போடப்பட்டுள்ளது. வருவாய் பற்றாக்குறையும், கடன் வாங்குவதும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. கடன் தொகை யில் பெருமளவு மூலதன செலவு செய்தால்தான் அரசின் வருவாய் பெருகும். மாறாக விருப்பச் செலவு களை செய்தால் வருவாய் பற்றாக் குறையும், கடனுக்கான வட்டியும் தான் அதிகரிக்கும். இதனால் வளர்ச்சி ஏற்படாது.
மத்திய அரசே காரணம்!
அப்போது குறுக்கிட்டு விளக்கம் அளித்த நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்,“ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு நமக்கு வழங்க வேண்டிய நிதி பகிர்வு, நிதிக்குழு மானியத்தை கணிசமாக குறைத்து வருகிறது. எனவே, வருவாய் பற்றாக் குறைக்கு மாநில அரசு மட்டுமே காரணம் அல்ல. மத்திய அரசுதான் என்றார். தொடர்ந்து பேசிய தியாகராஜன், மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் கடன் அளவு 25 விழுக்காடு இருக்க லாம். 27 விழுக்காடாக இருந்த கடன் அளவை 2006-11 கருணாநிதி ஆட்சியில் 19.6 ஆக குறைக்கப் பட்டது. ஜெயலலிதா ஆட்சியில் 18.8 விழுக்கடாக குறைந்தது. தற்போது 21.83 என்ற அளவிற்கு உயர்ந்துள் ளது. இதை எப்படி பாராட்ட முடியும்? மக்கள் நலத்திட்டங்களுக்கு செல விடும் தொகை இந்திய சராசரியை விட குறைவாக உள்ளது. எனவே, வருவாயை பெருக்க அனைத்து தரப்பு கொண்ட குழுவை அமைத்து ஆலோசனை பெற்று செயல்படுத்த வேண்டும் என்றார்.