tamilnadu

img

வங்கியிலேயே விஷமருந்தி தற்கொலை செய்த விவசாயி

கோவை,  ஆக.1-  சேலம் மாவட்டம், சங்ககிரி கொங்கணாபுரத்தை சேர்ந்த  பூபதி என்ற மகேஸ்வரன்(61)  மற்றும் 23 நண்பர்கள் சேர்ந்து பால் பண்ணை வைப்பதற்காக கோவை வெரைட்டி ஹால் சாலையில் உள்ள இந்தியன் வங்கியில் 2005-ம் ஆண்டு ரூ.9.93 கோடி பெற்று ள்ளனர். தற்போதைய நிலவரப்படி ரூ.20 கோடி செலுத்த வேண்டியுள்ளது. முன்னதாக, இத்தொகைக்கு அடமான மாக பூபதி உள்ளிட்டோரின் சொத்து  பத்திரங்களை வங்கியில் ஒப்படைத்து ள்ளனர். இந்நிலையில்  பால் பண்ணை தொழிலில் நஷ்டமடைந்து பெரும் கடன் சுமை ஏற்பட்டுள்ளது.  இந்த நிலையில், பூபதி வங்கியில் பெற்ற கடனுக்கான தனது பங்கை செலுத்துவதாகவும், தன்னுடைய அடமான சொத்துக்களை திருப்பி தருமாறு வங்கி நிர்வாகத்திடம் முறை யிட்டுள்ளார்.  ஆனால், இதனை ஏற்க மறுத்த வங்கி நிர்வா கம் கடன் பெற்ற அனை வரின் நிலுவைத் தொகையையும் செலுத்தினால் மட்டுமே, சொத்து பத்திரங்களை தரமுடியும் என தெரிவித்துள்ளனர். இதனால், மன உளைச்சலுக்குள்ளான பூபதி வங்கி வாசலிலேயே விஷ மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.  இந்த சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வெரைட்டிஹால் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

காவல்துறையின் அவசரம்

இதற்கிடையே, வங்கியில் தற்கொலை செய்துகொண்ட விவசாயி பூபதியின் உடல் வியாழனன்று மாலை 3.40 மணியளவில் கோவை அரசு  மருத்துவமனைக்கு பிரேத பரிசோத னைக்காக கொண்டு வரப்பட்டது.  இதைத்தொடர்ந்து மாலை 4.10 மணிக்குள் பிரேத பரிசோதனை நிறைவுபெற்று அவசர, அவசரமாக அவரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவ்வாறு சுமார் அரைமணி நேரத்திற்குள் பிரேத பரிசோதனைகள் செய்து பூபதியின் உடல் அவசர, அவசரமாக காவல்துறை யினரால் அனுப்பி வைக்கப்பட்ட சம்ப வம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.