தாம்பரம்
மே மாத தொடக்கத்திலிருந்து தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் ராக்கெட் வேகத்தில் உள்ளது. தினமும் 700-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவதால் மாநிலத்தின் பல பகுதிகள் கடும் கண்காணிப்பில் உள்ளன.
இந்நிலையில், தலைநகர் மண்டலமான சென்னைக்கு அருகே உள்ள புதிய மாவட்டமான செங்கல்பட்டில் கொரோனா பரவல் இன்னும் ஏற்றத்தில் தான் உள்ளது. தொடக்கத்தில் கோயம்பேட்டிலிருந்து பரவிய கொரோனா தற்போது உள்ளூர் மணடலத்திலேயே அசுர வேகத்தில் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 824 ஆக அதிகரித்துள்ளது. எனினும் ஆறுதல் செய்தியாக இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவால் செங்கல்பட்டில் இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.