வின்ஸ்டன் சர்ச்சில் 1954இல் என்ன கூறினார் என்பதைக் குறித்துக் கொள்வோம்: “முதலாளித்துவத்தின் இயல்பான தீயொழுக்கம், ஆசிகளைச் சமமற்ற முறையில் பகிர்வது; சோசலிசத்தின் இயல்பான நல்லொழுக்கம் துன்ப துயரங்களைச் சமமாகப் பகிர்வது.”
தொழிலாளர்கள், புலம் பெயர்ந்தோர் மற்றும் விவசாயிகள், விவசா யத் தொழிலாளர்கள், வீடற்றவர்கள் மற்றும் அடித்தட்டு மக்களின் துன்ப துயரங்கள் அதிகரிக்கக்கூடும் என்ற சந்தே கங்கள் இருந்தபோதிலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக மக்களின் பாதுகாப்பிற்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை, இந்தி யக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்தது. துரதிர்ஷ்டவச மாக, நாம் ஊகித்த அனைத்து சந்தேகங்களும் உண்மையாக மாறியிருக்கின்றன.
கொரோனா ஒரு வைரஸ் தொற்றாக ஆரம்பித் ததை, உலகமும், உலக சுகாதார ஸ்தாபனமும், 2019 டிசம்பர் இறுதி வாக்கில் கவனிக்கத் தொடங்கிவிட்டன. ஆனாலும், பிப்ரவரி முதல் வாரம் வரையிலும், நம் நாட்டில் பல இடங்களில், விமான நிலையங்களில் இது தொடர்பான வெப்ப சோதனைகள் எதுவும் அறிமுகப்படுத் தப்படவில்லை. வெளிநாடுகளிலிருந்து வரும் விமானப் பயணிகள் மூலமாக கொரோனா வைரஸ் தொற்று நம் நாட்டிற்குள் வருமானால் அவற்றை எதிர்கொள்ள, எத்தனை மருத்துவ மனை படுக்கைகள், முகக் கவசங்கள் தேவைப் படும் என்பது குறித்தோ, இதனைப் பரிசோதித்துப் பார்ப்பதற்கான உபகரணங்கள், வென்டிலே டர்கள், பயிற்சி பெற்ற மருத்துவ ஊழியர்கள் முதலானவற்றின் தேவைகள் குறித்தோ முறை யான மதிப்பீடு எதுவும் மேற்கொள்ளப்படவும் இல்லை.
கடந்த இருபது ஆண்டுகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமான அளவிற்கு அதிக ரித்திருக்கிறது என்று தெரிந்தபோதிலும் கூட இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மோடியும் அவருடைய உள்துறை அமைச்ச ரும் அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவை ரத்து செய்ததிலும், காஷ்மீர் மக்க ளுக்கும், தலைவர்களுக்கும் கடும் கட்டுப்பாடு களை விதித்ததிலும், பின்னர் வகுப்புவாத அடிப்படையில் மக்கள் மத்தியில் மதவெறித் தீயை விசிறிவிடும் விதத்தில் அரசமைப்புச்சட்டத் திருத்தங்களை மேற்கொண்டதிலும், பின்னர் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு, தேசியக் குடிமக்கள் பதிவேடு மூலம் கறைகளை உரு வாக்குவதிலும் மற்றும் தில்லித் தேர்தல் பிரச்சா ரத்தில் மிகவும் மோசமான முறையில் மதவெறிப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிடுவதிலும்தான் மிகவும் சந்தோஷமாக இருந்தார்கள்.
எனவேதான், கொரோனா தொற்று, இந்தியாவை வந்து சேரும்போது, அரசாங்கம் என்ன செய்வது என்றே தெரியாமல் நம்பிக்கை இழந்த நிலையில் இருந்தது. ஏனெனில் இங்கே இதனை எதிர்கொள்ளக்கூடிய அளவிற்குப் போதுமான அளவில் பொது மருத்துவமனைக ளோ, பொது மருத்துவக் கல்லூரிகளோ இல்லை. (மோடி அரசாங்கம், மருத்துவக் கல்வியை மேலும் அதிக அளவில் தனியார்வசம் ஒப்படைக்கும் விதத்தில் கொண்டுவந்த சட்டத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, எதிர்த்தது.) இவற்றுடன், மோடி அரசாங்கம் பொது விநியோக முறையை இரக்கமற்றமுறையில் அழித்திருப்பதும், பொதுப் போக்குவரத்து மற்றும் இதர அத்தியாவசியப் பொது சேவைகளையும் அழித்திருப்பதும் சேர்ந்து கொண்டன.
இந்த நிலையிலும் மதவெறிப் பிரச்சாரம்....
கொரோனா தொற்றுக்கு எதிராகப் போராடும் சமயத்திலும்கூட, மதவெறி பாசிஸ்ட்டுகள் நம் பன்முகக் கலாச்சாரத்தை அழிக்கும் வேலை யிலிருந்து ஒதுங்கிடவில்லை. இதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டு, நிஜாமுதீன் நிகழ்வு தொடர்பாக வகுப்புவாத சாயத்தைப் பூசியதாகும். இந்த நிகழ்வில் சுமார் 2100 பேர் கலந்துகொண்டார்கள் என்பதும், இதில் நூற்றுக்கணக்கானவர்கள் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் என்பதும் உண்மை. இவர்களில் சிலருக்குத் தொற்று ஏற்பட்டு, பத்து பேர் இறந்திருக்கிறார்கள் என்பதிலி ருந்து பிரச்சனையின் கொடூரம் மறுக்க முடியாத ஒன்றுதான். ஆனால், இதற்காக, உளவு ஸ்தாப னங்கள் தோல்வி அடைந்துவிட்டன, அல்லது கொரோனா தொற்று ஏற்படுமானால் பின்பற் றப்பட வேண்டிய அறிவுரைகளை அயல்நாடு களிலிருந்து வந்தவர்கள் புறக்கணித்துவிட்டனர் என்று வேண்டுமென்றே ஆபத்தான முறையில் அவதூறுச்சேற்றை அள்ளிவீசுவதைச் செய்துகொண்டிருக்கிறார்கள்.
கொரோனா வைரஸ், எவரின் மதத்தைப் பார்த்தோ, சாதியைப் பார்த்தோ தொற்றிக் கொள்வதில்லை. தங்களுக்கு தொற்று ஏற்பட்டி ருக்கக்கூடுமோ என்று சந்தேகித்திற்கு ஆளாகி யிருக்கிற எவராக இருந்தாலும், தாமாகவே முன்வந்து ஆய்வுகளை செய்து கொள்ள வேண்டும். வரவிருக்கும் நாட்களில் தொற்றுக்கு ஆளானவர்கள் அதிகரிப்பதற்கான சாத்தி யக்கூறுகளும் இருக்கின்றன. இதனை எதிர்த்து முறியடிக்கக்கூடிய விதத்தில் நாம் போதுமான மருத்தவ வசதிகளைப் பெற்றிருக்கிறோமா? இதனைத் தடுத்த நிறுத்தக்கூடிய விதத்தில் போதுமான அளவிற்கு நாம் தயாராக இருக்கி றோமா? மோடி உட்பட அவருடைய தலைமையி லான அரசாங்கத்தாலும், மதவெறி பாசிஸ்ட்டுக ளாலும் கடந்த ஆறு ஆண்டு காலமாக வேண்டு மென்றே உருவாக்கப்பட்ட அறிவியல்பூர்வமற்ற சூழ்நிலையை நாம் அனைவரும் நன்கு அறிவோம். இந்திய அறிவியல் காங்கிரசின் அமர்வுகளில் ஏராளமான அறிவியலறிஞர்க ளுக்கு முன்னாலும் மற்றும் பல தருணங்களிலும் இவர்கள் அளித்திட்ட அறிக்கைகளை நாம் நினைவுகூர்ந்திடுவோம். மார்ச் மாதத்தின் முதல் இரு வாரங்கள் வரையிலும்கூட இவர்கள் கொரானா வைரஸ் தொற்றுக்கு எதிராக, பசுவின் சிறுநீரை பரிகாரமாகக் கூறிவந்தது நமக்குத் தெரியும்.
பிரதமர், மாநில முதல்வர்களுடன் மேற்கொண்ட காணொலிக் காட்சி மூலமாக நடத்திய கூட்டம், இதனை எதிர்கொண்டிட தாங்கள் எந்த அளவிற்குத் தயாரிப்பு வேலையில்லாமல் இருக்கிறோம் என்பதையும், இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே கலந்தாலோசனைகளோ மற்றும் ஒருங்கி ணைப்பு நடவடிக்கைகளோ இல்லாது இருக்கி றோம் என்பதையும் காட்டின. கேரள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் முன்கூட்டியே சிறப்பான முறையில் பல நடவடிக்கைகளை எடுத்திருந்தது.
உண்மையில் மனிதசமுதாயம் மிகப் பெரிய அளவில் சுகாதாரப் பேரிடரை எதிர்கொண்டி ருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று, உலகில் உள்ள அனைத்து மக்களையும், அது ஆசியா(சீனா)விலிருந்து அமெரிக்கா வரை யிலும், ஐரோப்பாவிலிருந்து ஆப்பிரிக்கா வரையிலும் உள்ள மக்களை தொற்றிக் கொண்டும், பாதித்துக்கொண்டுமிருக்கிறது.
முதலாளித்துவத்தின் கொடூரம்
இதில் மிகவும் மோசமாகப் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பவர்கள் அனைத்து நாடுகளிலும் உள்ள ஏழை மற்றும் உழைக்கும் மக்களாவர். இந்தத் தொற்று, முதலாளித்துவ சமூக அமைப்பின் இயல்பான குணத்தையும், கொடூ ரத்தையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது.
முதலாளித்துவம், தன்னுடைய நவீன தாராள மயக் கட்டத்தில், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சமத்துவமின்மையையும், அநீதி யையும் உருவாக்கி இருக்கிறது. வீட்டு வசதி, சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி, வேலைவாய்ப்பு மக்களின் அடிப்படை உரிமைகளாக உத்தர வாதப்படுத்தப்படவில்லை. நவீன தாராளமயம் நுகர்வியத்தையும், தனியுடைமைக் கோட் பாட்டையும் ஈவிரக்கமற்றமுறையில் மேம் படுத்திக் கொண்டிருக்கிறது. சக மனிதர்க ளுக்காகக் கவலைப்படும் மனிதகுலத்தின் அடிப்படையான சமூகப் பண்புகளைக்கூட அழித்து ஒழித்துக்கொண்டிருக்கிறது. தனியார் சொத்துக்கள் மற்றும் லாபம், எந்தக்காலத்திலும் சமூகத்திற்குச் சேவை செய்ய வேண்டும் என்கிற உன்னதமான விழுமியங்களை உயர்த்திப்பிடிக்காது.
கொரோனா தொற்று, மனிதகுலத்திற்கு முன்பாக உள்ள மாற்று என்ன என்பது குறித்தும், நடப்பு நெருக்கடியை சமாளிக்கக்கூடிய அதே சமயத்தில் மனிதகுலத்திற்கும் உடனடிப் பிரச்சனைகளுக்கும் முன்பு இருக்கக்கூடிய மாற்றுக் கொள்கைகள் குறித்து மேற்கொள்ள வேண்டிய நீண்டகால அடிப்படை நடவடிக் கைகள் என்ன என்பது குறித்தும் பிரச்ச னைகளை எழுப்பி இருக்கிறது.
சுகாதாரப் பாதுகாப்பு, வீட்டுவசதி, கல்வி, உற்பத்திச் சாதனங்கள் முதலானவற்றை சமூக மயமாக்குவது இன்றைய சூழ்நிலையில் அடிப்ப டைப் பிரச்சனையாக மாறி இருக்கின்றன.
இவ்வாறு கூறுவது சோசலிசமாகாதா என்று சில கருத்தியலாளர்கள் விவாதிக்கலாம். ஆம், இது சோசலிசம்தான். இன்றைய நிலைமை, முதலாளித்துவம் நேர்மையற்றது என்பதையும், பகுத்தறிவற்றது என்பதையும் காட்டி இருக்கிறது. இதுதொடர்பாக நாம் மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் கூறி யதைக்கூட கூறத் தேவையில்லை, வின்ஸ்டன் சர்ச்சில் 1954இல் என்ன கூறினார் என்பதைக் குறித்துக் கொள்வோம்; “முதலாளித்துவத்தின் இயல்பான தீயொழுக்கம், ஆசிகளைச் சமமற்ற முறையில் பகிர்வது; சோசலிசத்தின் இயல்பான நல்லொழுக்கம் துன்ப துயரங்களைச் சமமாகப் பகிர்வது.”
இன்றைய மோசமான விளைவுகளுக்கு ஒரே மாற்று சோசலிசமே என்பது மேலும் மேலும் தெளிவாகிக் கொண்டிருக்கிறது. இதுவே எதிர்காலம் மற்றும் நம்பிக்கை.
நன்றி: நியூ ஏஜ்,
தமிழில்: ச.வீரமணி