tamilnadu

img

அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?

கல்வி உரிமைச் சட்டத்தின்படி அடிப்படைக் கட்டமைப்பு, உரிய ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட வசதிகளை உருவாக்கஅரசுப் பள்ளிகளில் பொதுமக்களின் பங்கேற்போடு கல்வித்தரத்தை உயர்த்த செயலாற்றி வருகிறது ‘பள்ளிப் பாதுகாப்பு இயக்கம்’. இதன் ஒருங்கிணைப்பாளர்களான முன்னாள் துணைவேந்தர் முனைவர் வே. வசந்திதேவி, அறிவொளி - அறிவியல் இயக்க முன்னோடி ஜெ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ‘தீக்கதிர்’ நாளிதழுக்கு அளித்த சிறப்பு நேர்காணல்

இந்திய சமூகக் கட்டமைப்பில் கல்வி

உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லாதவாறு  ஒரு கல்வி அமைப்பு இந்தியாவில், அதாவது பல்வேறு படிநிலைகளை உள்ளடக்கிய பள்ளிக் கல்வி முறை நிலவுகிறது.விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் பத்தாண்டுகளில் அனைவருக்கும் பொதுவான பள்ளிக்கூடங்கள் தான் இருந்தன. 1970-க்குப் பிறகு ‘மக்கள் நலஅரசு’(றநடகயசந ளவயவந) என்பதற்கு மாறாக  ‘தாராளமயமாக்கலின் அரசாக’  (நேடி டiநெசயட ளவயவந) உருமாறியது. இதற்குஏற்ற பொருளாதாரக் கொள்கையும் அதற்கு உகந்த  கல்விமுறையும் திட்டமிட்டு அதிகார வர்க்கத்தால் உருவாக்கப்பட்டன. இதன் விளைவாக அடி பரந்தும் உச்சிகுறுகியும் உள்ள படிநிலை சமுதாயக் கோபுரம் போன்ற அமைப்பாக சமூகம் உள்ளது. இந்த படிநிலை சமூக அமைப்பில் கோபுரத்தின் உச்சியில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வசதி படைத்தோர், இன்றைய உலகின் வாய்ப்புகளை அள்ளிச்செல்லும் திறமையைப் பெறுகின்றனர். பெரும்பான்மை மக்கள் தகுதியற்றவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு, வடிகட்டப்பட்டு பல மட்டங்களில் வெளியே தள்ளப்படுகிறார்கள். இவ்வாறு இழப்புக்கும் தவிக்கும் நிலைக்கும் உள்ளாகுபவர்கள் பெரும்பாலும் சாதிய சமூகத்தின் அடித்தட்டில் உள்ள தலித்துகள், பழங்குடியினர், நிலமற்ற பிற்படுத்தப்பட்ட ஏழை மக்கள், மதச் சிறுபான்மையினர் - குறிப்பாக இப்பிரிவைச் சேர்ந்த பெண்கள். இப்படியான நிலைக்கு இந்திய - தமிழகக் கல்விமுறை யும் தள்ளப்பட்டு திசை தெரியாமல் தவிக்கிறது. இன்றை யக் கல்வி அப்பட்டமான வர்க்க - சாதியக் கல்வி. இதை முற்றிலும் மாற்றாமல் தமிழ்நாட்டில், இந்தியாவில்  கல்வி மேம்பாடு சாத்தியமில்லை, முன்னேற்றமும் இல்லை, ஜனநாயகமும் இல்லை.

வேர்களும் சிறகுகளும்
தமிழகத்தைத் தவிர இந்தியாவில் எந்த மாநிலத்திலும் அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்விமுறை (நுபேடiளா அநனரைஅ)  இல்லை. தமிழன்னைக்கு சிலை, தமிழ் மொழிக்குச் செம்மொழி அந்தஸ்து, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழிக்கான இருக்கை ஆகியவற்றையெல்லாம் ஏற்படுத்த முயன்ற ஆட்சியாளர்கள், தமிழகத்தில் தாய்மொழிவழிக் கல்வியைவளர்த்தெடுக்க திட்டவட்டமான செயல்பாடுகள் எதிலும்ஈடுபடவில்லை. இன்னும் சொல்லப்போனால் ஆங்கில வழிப் பள்ளிகளை உருவாக்கி, பள்ளிக் கல்வியில் தனியார்மயமாக்கத்துக்கு வித்திட்ட தமிழ்நாட்டு ஆட்சியா ளர்கள், நாட்டுக்கே தவறான வழியைக் காட்டியுள்ளார்கள். கல்வியின் அடிப்படைகளாக இரண்டு முக்கிய அம்சங்கள் இருக்க வேண்டும். ஒன்று, உலக அறிவுச் செல்வத்தைத் தேடிக் கொண்டுவந்து பயனளிக்கும் வகையில் கற்றுத்தருதல். இரண்டு, தாங்கள் வாழும் சமூகத்தின் இயக்கப் போக்குகளைப் புரிந்துகொண்டு, அதில் பங்களிப்பவர்களாக மாற்ற வேண்டும். அதாவது வேர்களும் (சுடிடிவள)  சிறகுகளும் (றுiபேள)  உடையதாக கல்விமுறை விளங்க வேண்டும். இது தாய்மொழிவழிக் கல்வி மூலமே சாத்தியமென உலகம் முழுவதும் கல்வியாளர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், தமிழகத்திலோ ஆங்கிலவழிப் பள்ளியையே பெற்றோர் விரும்புவதாகக் கூறி தமிழ்வழிக் கல்வி திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறது. கொடுமை என்னவென்றால் ஆங்கிலவழி வகுப்பறைகளில் ஆசிரியர்கள் தமிழில்தான் வகுப்பெடுக்கிறார்கள். உலகமெங்கும் தாய்மொழிவழிக் கல்வியின் மூலமே மாணவர்களுக்குக் கற்பித்தல் நடைபெறுகிறது. தமிழகத்திலும் ஆங்கி லத்தைப் பயிற்று மொழியாகக் அனுமதிக்கக் கூடாது. ஆங்கிலவழிக் கல்வி நம் வகுப்பறைகளை புரியாத இருளில் மூழ்கடித்து, சுவைபட கல்வி கற்பதை இயலாத தாக்கிவிட்டது.அதேவேளையில், இன்றைய தேவையை கருத்தில் கொண்டு ஆங்கில மொழி உள்ளிட்ட பிறமொழிகளை இரண்டாவது, மூன்றாவது மொழியாக சிறப்பாகக் கற்பிக்கஏற்பாடுகளை செய்து தர வேண்டும். இத்தகைய நடைமுறைதான் உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவ, சோஷலிச நாடுகளில் நடைமுறையில் உள்ளது.

அரசுப் பள்ளி பாதுகாப்பில் மக்கள் இயக்கங்களின் பணி
பெற்றோர்களிடம் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கத் தயங்கு வதற்கு  மூன்று மிக முக்கியமான காரணங்களைச் சுட்டிக்காட்டினார்கள்.  

1. பள்ளியில் குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை. அதாவது பள்ளிக் கூடத்தில் சுற்றுசுவர், காவலாளி போன்றவர்கள் இல்லாதது. 
2.  ஒரு வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை இல்லை. 
3. பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லை. 
இதையெல்லாம் அரசு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் நிர்ப் பந்தங்களை உருவாக்க வேண்டும்.
இத்தகைய மாற்றங்களைச் செயல்படுத்த சமூகத்தின் பங்கேற்பை உத்தரவாதப்படுத்த கல்வி உரிமைச் சட்டத்தில் வழி உண்டு.  பெற்றோர், பள்ளிகளின் அருகில் குடியிருப்போர், உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களைக் கொண்ட பள்ளி மேலாண்மை குழுக்கள் (School Management Committees) ஒவ்வொரு பள்ளியிலும் அமைக்கப்பட வேண்டும். பள்ளி நிர்வாகம் முழுவதும் இக்குழுக்களிடம் ஒப்படைக்கவேண்டும். ஆனால், தற்போது இவை பெயரளவில், அதிலும்தலைமையாசிரியர், கல்வித் துறைநிர்வாகிகளின் விருப்பத்திற்கேற்றாற் போல் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்களை உருவாக்குவதில், அவற்றில் பங்கேற்றுச் செயல்படுத்து வதில், அரசுப் பள்ளிகளில் உள்ளகுறைகளைக் களைந்து முன்னே ற்றத்தை சாதிப்பதில் வெகுமக்கள் அமைப்புகள், விவசாய-தொழிற்சங் கங்கள், ஓய்வுபெற்றோர் அமைப்பு கள் முக்கியப் பங்கு வகிக்கவேண்டும். மக்கள் அமைப்புகளின் பொறுப்பேற்பும், கண்காணிப்புமே கல்வி குறித்த பொறுப்புகளை, கடமைகளை ஆட்சியாளர்கள் நிறைவேற்றும் சூழலையும் நெருக்கடியையும் உண்டாகும்.

கல்வி உரிமைச் சட்டம் : நடந்ததும் நடக்க வேண்டியதும்

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 - இச்சட்டம்தான் 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வி உரிமையளிக்கும் ஆதாரச் சட்டம். பல ஆண்டுகளாக மக்கள் இயக்கங்கள் போராடியதன் விளைவாக, நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. மக்களின் எதிர்பார்ப்புகள் பலவற்றை இச்சட்டம் உள்ளடக்கி இருக்காவிட்டாலும், ஏமாற்றம் தந்தாலும், காலம் தாழ்ந்து உருவான ஒரு சட்டப் பாதுகாப்பு என்ற வகையில் இச்சட்டம் வரவேற்கத்தக்கது.ஆனால், பத்து ஆண்டுகளுக்குப் பின்னும் இச்சட்டம் பெருமளவு நிறைவேற்றப்படாமல் உள்ளது. சில ஆய்வுகளின் அடிப்படையிலான கணிப்பில் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 10 சதவீதப் பள்ளிகளில்தான்இந்தச் சட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசியல் உறுதியின்மை யால்,  இச்சட்டத்தில் பல அம்சங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இந்தச் சட்டத்தில்சில நல்ல பிரிவுகளை பா.ஜ.க. அரசு நீர்த்துப்போகச்  செய்திருக்கிறது. இச்சட்டத் தின்படி எட்டாம் வகுப்புவரை குழந்தைகள் தேர்ச்சிபெறுவதைத் தடுக்கக் கூடாது. இதில் சமீபத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு ஐந்தாம் வகுப்பு வரைதான்குழந்தைகள் தேர்ச்சி பெறுவதைத் தடுக்கக் கூடாது என மாற்றிவிட்டனர். உரிய கால எல்லைக்குள் பயிற்சி முடித்த ஆசிரியர்களை நியமிப்பது போன்ற விதிமுறைகளை நடைமுறைப்படுத்தாமல், காலநீட்டிப்பு ஏற்படுத்தும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இத்தகைய தவறுகளை மாற்றி, சட்டத்தின் ஓட்டைகளையும் குறைகளும் சரிசெய்யும் திருத்தங்களை மட்டும் மேற்கொள்ளவேண்டும்.

தடைகளைத் தகர்த்து முன்னேறும் கேரளம்

கேரளத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக நடுஇரவிலிருந்து விடிய விடிய பெற்றோர்கள் வரிசையில் நிற்பதைக் காண முடிகிறது. கல்விக்குக் கூடுதல் நிதிஒதுக்கீடு, நீண்டகால திட்டங்கள், அரசியல் உறுதி, இவற்றோடு மக்கள் பிரதிநிதிகளையும் மக்களையும் இணைத்து செயலாற்றும் விதம் போன்றவை முக்கியமானவை.ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு அரசுப் பள்ளி ஒன்றை முன்மாதிரிப் பள்ளியாக மாற்ற வேண்டியது சட்டப்பேரவை உறுப்பினரின் கடமையாக மாற்றப்பட்டுள்ளது. கட்சி வேறுபாடின்றி அனைத்து சட்டப்பேரவை உறுப்பி னர்களும் தங்களது செல்வாக்கை, சமூக அக்கறையை வெளிப்படுத்தும் விதமாக போட்டி போட்டுக்கொண்டு இத்திட்டத்தை செயல்படுத்துகின்றனர். அடுத்த ஆண்டில் அரசுப் பள்ளிகளில் 20,000 மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர். இதைத் தொடர்ந்து 8 முதல் 12 ஆம் வகுப்புவரை உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றப்பட்டுள்ளன. கேரள அரசின் இத்தகைய  திட்டங்களுக்கு எதிர்ப்புகளும் எழுந்தன. ஆனால், அரசு உறுதியாக கல்வி உரிமைச் சட்டத்தின்படி சமூகத்தில் நலிந்த, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்குத் தரமான இலவசக் கல்வி அளிப்பதை அனைவருடைய கடமையாக மாற்றியது.  தற்போது ஒரு தொகுதிக்கு ஒரு அரசுப் பள்ளியை சர்வதேச பள்ளியாக மாற்றுவது என்ற திட்டத்தில் கேரள அரசு இறங்கியுள்ளது. இதற்காக ஆண்டுக்கு  முறையே ரூ. ஐந்து கோடி, ரூ. மூன்று கோடி, ரூ. ஒரு கோடி நிதியைச் செலவழிக்க உள்ளது. இப்படியாக மக்கள் பங்கேற்போடு  தடைகளைத் தகர்த்து கேரள இடது முன்னணி அரசு முன்னேறுகிறது. தில்லியில் உள்ள ஆம் ஆத்மி அரசும் கல்வித் துறையில் குறிப்பிடத்தக்க சாதனைகளை இக்காலத்தில் நிகழ்த்தியுள்ளது. கல்விக்காக ஆண்டு பட்ஜெட்டில் 28 சதவீதம் ஒதுக்கீடு செய்துள்ளது. ஆசிரியர் நியமனம், அடிப்படைக் கட்டமைப்பு போன்றவற்றில் கவனம் செலுத்தியுள்ளது. குளிர்சாதன வசதி கொண்ட வகுப்பறை, நீச்சல்குளம், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாகத் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

செய்யவேண்டியது என்ன?

கல்வி உரிமைச் சட்டத்தின் அனைத்து அம்சங் களும், அனைத்துப் பள்ளிகளிலும் காலக்கெடு நிர்ணயிக்கப் பட்டு உறுதியாக நிறைவேற்றப்பட வேண்டும்.

n அரசுப் பள்ளிகளை மேம்படுத்த ‘கல்விச் சீர்’ கொடுக்கச் சொல்லி கிராம மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. அரசு தனது பொறுப்புகளை உதறித் தள்ளுவதன் வெளிப்பாடு இது.  ‘எங்கள்      பள்ளி-திறமையான பள்ளி’ என்ற வகையில் அரசு தானே முன்நின்று செய்ய வேண்டிய பணியை கைவிடுவதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. 

n கல்வி உரிமைச் சட்டத்தின் விதிமுறைகள்படி இயங்காத தனியார் பள்ளிகள் அனைத்தையும் மூடவேண்டும். முதற்கட்டமாக அந்தத் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை நிறுத்த  நடவடிக்கை              எடுக்க வேண்டும். 

n தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் வசூலிப்பதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள குழுவின் பரிந்துரை அடிப்படை யிலேயே கட்டணத்தை வசூலிக்க வேண்டும்.

n அனைத்து அரசு, மாநகராட்சிப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழுக்கள் (SMC) அமைக்கப்பட வேண்டும். இக்குழுக்களில் பெற்றோர், பள்ளிக்கு அருகில் குடியிருப்போர் பங்கேற்றுச் செயலாற்ற முன்வர          வேண்டும். பெற்றோர் பங்கேற்கும் நேரத்தில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

n தனியார் வணிக நோக்குப் பள்ளிகளுக்கு ஆதரவாக நீதிமன்றங்கள் கொடுத்துள்ள தீர்ப்புகள் அனைத்தின் மீதும், மாநில அரசுகள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட 
   வேண்டும்.

n தமிழகத்தில் கல்வித் தரம், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்திருக்கிறது. இப்படிப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு     அலகாபாத் நீதிமன்ற உத்தரவுப்படி அரசு கருவூலங்களில் ஊதியம் பெறும் உயர்மட்ட அதிகாரிகள் முதல் அனைத்துப் பணியாளர்களின் குழந்தைகளும் அரசுப் பள்ளியில் பயில்வதற்கு நடவடிக்கை                   எடுக்கப்பட வேண்டும்.