லகம் முழுவதும் கோவிட் 19 வைரஸ் நோய் தாக்கம் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகிறது என்பதை நாம் அறிவோம். ஒரு பக்கம் அறிவு சார் விஞ்ஞானிகள் இதற்கெதிரான தடுப்பூசியை கண்டுபிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர். பல நாடுகள் தங்களின் அடையாளங்களை இழந்து வருகின்றன. அந்நாடுகளின் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளின் அலங்கோலம் உலகுக்கெல்லாம் தெரிந்து வருகிறது. இதில் குறிப்பாக மேற்குலக நாடுகள், வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளே அதிகம். அதுவும் மருத்துவத்தில் முன்னேற்றம் அடைந்த நாடுகளே உள்ளன. கோவிட் 19 தடுப்பு நடவடிக்கைகளை இந்தியாவில் மத்திய அரசும், மாநில அரசுகளும் அவரவர் பாணியில் செய்து வருகின்றன.
சமூகத் தொற்று என்பது வந்து விடக்கூடாது என்பதற்காக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளில் ஒன்று “ஆரோக்கிய சேது” எனும் செயலி. பிரதமர் மோடி சென்ற மாதம் ஊரடங்கு உத்தரவை அறி விக்கும் போதே இந்த செயலியை ஸ்மார்ட் கைபேசி வைத்திருக்கும் அனைவரும் பதிவிறக்கம் செய்ய வேண்டு மென கேட்டுக் கொண்டார். அவரின் “அறிவுரைகளை” அப்படியே பின்பற்றும் தமிழக அரசும் அதை வழிமொழிந்தது.
நாளிதழ்களில் மெகா விளம்பரங்களை செய்தது. ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசிகள் அல்லவா? பிரதமர் இரண்டு முறை தொலைக்காட்சியில் உரை யாற்றிய போதும், வானொலியில் “மன் கி பாத்” பேசிய போதும் பொது மக்கள் அனைவரும் இந்த செயலியை பதி விறக்கம் செய்வது தேசத்திற்கு செய்யும் மாபெரும் தொண்டில் ஒரு பகுதி, அரசோடு பொது மக்களும் இணைந்து கொரோனாவை ஒழிப்பதில் இது ஒரு பெரும் பங்காற்றும் என சொன்னார்.
ஆரோக்கிய சேது... என்ன செய்யும்?
நவீன விஞ்ஞான யுகத்தில் பெரும்பாலான மக்கள் ஸ்மார்ட் கைபேசிகளை வைத்துள்ளனர் (கைபேசி பயன் படுத்துவோரில்). இதில் தேவைக்கேற்ப செயலிகளை பதிவிறக்கம் செய்வது வழக்கம். விளையாட்டு, வர்த்தகம், முகநூல், வாட்ஸப், டெலிகிராம், ஸ்கைப் என பல விதமான சமூக ஊடக செயலிகள் ஒரு பக்கம், மற்றொரு பக்கம் பொழுது போக்கு தேவைக்காக செயலிகளை பதிவிறக்கம் செய்து கொள்வார்கள். காரணம், துரிதமாக விசயங்களை பகிர்வது, தெரிந்த தகவல்களை உடனுக்குடன் பரவலாக்குவது என பல வகைகள் உண்டு.
இந்திய அரசு தற்போது கோவிட் 19 நோய் தொற்று எனும் நோய்க்கு எதிராக மக்க ளுக்கு விழிப்புணர்வை, தொடர் தகவலை பகிரவே இந்த செயலி உதவும் என சொல்கிறது. அப்படி என்ன இதில் முக்கியமாக பகிர்கிறார்கள் என்றால் மெச்சும் படியாக ஒன்றும் இல்லை. மாறாக அன்றாடம் தொலைக்காட்சிக ளில், பல ஊடகங்களில் சொல்லப்படும் பாதுகாப்பு நட வடிக்கைகளை அந்தந்த மாநில மொழிகளில் பகிர்ந்து கொண்டே இருக்கின்றனர்.
அதை தவிர பதிவிறக்கம் செய்த வர்களின் பகுதியில் உள்ள பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் வெளியாகிறது. தினமும் தேசிய மற்றும் மாநில அளவில் அரசுகளால் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் மற்றும் புதிய நோயாளிகள், குணமடைந்தோர், மரணித்தோர் பட்டி யல் எண்ணிக்கையாக வெளியாகிறது. அவ்வளவே. அப்படி இருந்தும் மோடியும் அவரது அரசும் ஏன் இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் தருகிறது என நம்மை யோசிக்க வைக்கிறது.
செயலிகள்... அனுபவங்கள்
பொதுவாக ஒரு செயலி உருவாக்கப்படுவதற்கு பல கார ணங்கள் இருக்கக்கூடும். அந்த செயலியால் அதை உரு வாக்கியவர்களுக்கு என்ன பலன்கள் என்பதையே நாம் யோசிப்போம். அப்படி ஏதும் இந்த செயலியால் பயனுள்ளதா? அப்படியானால் யாருக்கு? எனும் கேள்வியே எழுகிறது. ஆரோக்கிய சேது செயலியை பொறுத்தவரையில், அதில் உள்நுழைந்து பயனாளியாக வேண்டுமெனில், பல தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். தனிநபரின் முக்கிய தகவல்கள் அதில் அவசியம். அதோடு சேர்த்து நீங்கள் கைபேசியோடு பயணிக்கும் உங்கள் பயணத்தை அந்த செயலி (GPS TRACKER) மூலம் கண்காணிக்கும். அடிப்படையில் இது இணைய சுதந்திரத்திற்கு எதிரானது.
ஒரு செயலி மூலம் ஒருவரை பின் தொடர்வது( TRACKING) சட்டப்படி குற்றம். ஆனாலும் ஆரோக்கிய சேது பின் தொடரும். இன்னொரு விசயம். இந்த செயலியை நீங்கள் பதி விறக்கம் செய்ய முடிவு செய்து கைபேசியில் அதை தர விறக்கம் செய்யத் துவங்கினால், அதில் உறுப்பினர் ஆனால் தான் வெளியே வர முடியும். இதுவும் தவறானது. காரணம், விதிமுறைகள் ஒருவருக்கு பிடிக்கவில்லை என்றால் அவ ருக்கு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். அது இதில் இல்லை. இதே போன்றதொரு செயலியை சிங்கப்பூர் அரசும் உருவாக்கியுள்ளது. அது குறித்து தேடலில் இறங்கிய போது பல உண்மைகள் வெளிவந்தன. அதில் பின்தொடரும் வேலை, வேண்டாம் என்றால் ஒதுக்கி தள்ளும் வாய்ப்பு உள்ளது.
அவர்கள் சர்வதேச ஊடக சுதந்திர வழிமுறை களை பின்பற்றுகிறார்கள். மற்றொரு விசயம். இந்த செயலியை தரவிறக்கம் செய்யும் போது கேட்கப்படும் அனைத்து தகவல்களும் நாம் மீட்டெடுக்க இயலாது. கொடுத்தது கொடுத்தது தான். கோவிட் 19 ஒரு தற்காலிக நோய்த்தொற்று. அது தொடர்ந்து இருக்கப் போவதில்லை. ஆனால் செயலியோ நிரந்தரம். இதுவும் சரியான நடைமுறையல்ல. நடைமுறைகளை மீறுவது, மாற்றுவது தானே பிஜேபியின் வேலை.
ஆரோக்கிய சேதுவின் நம்பகத்தன்மை?
இந்த செயலியின் பணிகளை அரசோ அல்லது மத்திய சுகாதாரத் துறை அமைச்சகமோ செய்யவில்லை. அதையும் ஒப்பந்த முறையில் வேறு தனியார் நிறு வனங்களே செய்கின்றன. அதே போல, இதை கண்கா ணிக்கும் பொறுப்பை எந்த துறையும் செய்யவில்லை. மாறாக அது ஒரு “ தனி வழி”யில் சென்று கொண்டிருக்கிறது. இதிலும் நமக்கு ஒர் முன்னுதாரணம் உள்ளது. சிங்கப்பூரில் உருவாக்கப்பட்டுள்ள செயலியை அந்நாட்டு அமைச்ச கமே கண்காணிக்கிறது.
ஒரு செயலியின் நம்பகத்தன்மையை உறுதி செய்யா மல் இருப்பது ஒரு அரசுக்கு நல்லதல்ல. அதுவும் இது போன்ற பேரிடர் காலத்தில். நிறுவனங்களின் மீதான நம்பிக் கையை இது குலைக்கும். சாதாரண சாமானியனான நமக்கு இது குறித்து தெரியும் போது அரசுக்கு தெரியாமல் இருக்குமா? நிச்சயம் தெரிந்திருக்கும். தெரிந்தும் இந்த அரசு அதைச் செய்கிறதென்றால் இதன் பின்னணியில் ஏதாவது சூட்சுமங்கள் கண்டிப்பாக இருக்கும். அதற்கு தேவை என்ன அரசுக்கு? சர்வதேச இணைய கூட்டமைப்பின் மோடி அரசின் இந்தச் செயலியின் தன்மை குறித்து பல அச்சங்களை எழுப்பியுள்ளனர். ஏன் அரசு இதை முன்மொழியவில்லை, இயக்கவில்லை, என்பதும், இந்தச் செயலியில் வெளிப் படைத்தன்மை, தனியுரிமை இல்லை. மேலும் பயனா ளியை பின் தொடர்வது சைபர் குற்றம். அதை அரசே செய்வது நல்ல முன்னுதாரணம் இல்லை.
அதே போல மற்ற செயலிகளை பயன்படுத்திட நாம் கொடுக்கும் தகவல்கள் கைபேசியிலேயே தான் இருக்குமே தவிர மற்றவர்களுக்கு தெரிய வராது. ஆனால் ஆரோக்கிய சேதுவில் தகவல்கள் பரவலாக்கப்படும். அதாவது அவசர தேவையெனில் அரசே பகிர்ந்து விடுமென விதிமுறைகளில் சொல்லப்படு கிறது. அவசரம் எது என்பதை யார் தீர்மானிப்பார்கள் என்பதே கேள்வி. ஆனால் அதற்கு விளக்கமில்லை. ஆக எல்லா வற்றிலும் ஒரு சிக்கல் இருப்பதை மறுக்க இயலாது.
கட்டாயம் ஏன்?
கொரோனா தொற்று பரவலை எல்லோரும் தெரிந்து கொள்வதே இந்தச் செயலியின் முக்கிய நோக்கம் என சொல்கிறது அரசு. அது மட்டுமே பிரதானம் என்றால் எதற்கு இவ்வளவு விளம்பரம்? எதுக்கு இவ்வளவு நிர்ப் பந்தம் என யோசித்தால் பல உண்மைகள் தெரிய வரும். இப்படியான செயலிகள் மூலம் தகவல் சேகரிப்பு என்பது இந்தியாவுக்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால் அதன் (ஆதார்) பலாபலன்களை இன்னும் முழுமையாக நாம் எதிர்கொள்ள வில்லை. அது ஒரு பக்கம் இருக்க, இந்தச் செயலியை இது வரையில் தேச அளவில் 70 லட்சம் பேர் மட்டுமே தரவிறக்கம் செய்துள்ளனர் என்பதை அரசின் புள்ளி விபரங்களே சொல்லுகின்றன.
ஏனெனில் இது மக்களிடம் வரவேற்பைப் பெறவில்லை. ஆயினும் அரசு விடவில்லை. முதற்கட்டமாக மத்திய அரசு ஊழியர்கள் கட்டாயமாக இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதாவது அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை இப்படி சொல்கிறது “நீங்கள் பணிக்கு வருவது கூட முன்னுரிமை இல்லை. முதல் வேலையாக ஆரோக்கிய சேதுவை பதிவிறக்கம் செய்யுங்கள்” இது ஒரு கட்டளை என முடிகிறது. ஆக மத்திய அரசுக்கு இது ஒரு மதிப்பு பிரச்சனை என ஒதுங்கி விட முடியாது. அப்படி இருந்திருந்தால் இப்படி ஒரு கட்டாய சுற்றறிக்கை அனுப்பியிருக்காது. அப்படியென்றால் ஏன் இந்த கட்டாயம்? அரசுக்கு மேலும் ஒரு தரவுத்தளம் (DATA BASE) தேவைப்படுகிறது என்றே தெரிகிறது.
ஏற்கெனவே ஆதார் இருக்கும் போது, இதையெல்லாம் போய் கேட்பார்களா? என அப்பாவியாக நாம் கேள்வி கேட்க முடியாது. அதுவும் குறிப்பாக இந்த தனி யார்மய காலத்தில் அதுவும் குறிப்பாக மருத்துவத் துறையை இந்த அரசு திறந்து விட முனைப்பில் இருக்கும் போது, இந்த செயலியை பற்றி ஆழமாக யோசிக்க வேண்டியுள்ளது. இதனால் இன்னொரு பிரச்சனையும் உருவெடுக்க வாய்ப்புள்ளதாக மென்பொருள் வல்லுநர்கள் கருதுகிறார் கள். அதாவது புதிதாக ஒருவர் கைபேசி வாங்கினால் அதில் இயல்பு நிலையிலேயே (DEFAULT) இந்த செயலியை புகுத்திட ஏற்பாடு இருப்பதாகக் கருதுகின்றனர். சகல துறைகளிலும் மக்களை வஞ்சித்து வரும் இந்த அரசு இந்த பேரிடர் காலத்தையும் விட்டு வைக்காமல் நம்மை “வர்த்தகப் பொருளாக” மாற்றிடும் வாய்ப்புள்ளதாகவே கருத வேண்டியுள்ளது என்பதே உண்மை.
தன் மக்களை தனியாரின் லாப வேட்டைக்காக காவு கொடுக்க எத்தனிக்கும் இந்த அரசின் முகத்திரையை கிழிப்பதே நமது முதற் கடமை. ஆரோக்கிய சேதுவை பொது மக்கள் அனைவரும் பதிவிறக்கம் செய்ய வேண்டும். இல்லையென்றால் ரூ.1000 அபராதமாக கட்டவேண்டும். அபராதத் தொகை யை செலுத்த தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும். இது தில்லி போலீசின் அதிரடி உத்தரவு. அந்த செயலியின் இலட்சினையை (logo) ஒரு முறை பாருங்கள். உங்களுக்கே எல்லாம் புரியும்.இலச்சி னையை பார்த்தவுடன் புரியும், இது காவி அரசியலின் மற்று மொரு சூழ்ச்சி என்று.
இந்திய மக்களின் நோய்த் தன்மை பற்றிய பெரிய தரவுக்களமாக இது இருக்கும், அப்படி அவர்களுக்கு பல செய்திகள் கிடைத்தால் அந்த தகவல்களை பன்னாட்டு பகாசுர முதலாளிகளுக்கு அதுவும் குறிப்பாக அமெரிக்க மருந்து நிறுவனங்களிடம் பகிர்வது இந்த செயலியின் உள்நோக்கம்.