திரைக்கலைஞர் சூர்யா அறிக்கை
பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் இறைவன் உறையும் இடமாக கருத வேண்டும் என்கிற கருத்தை, எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் வரவேற்கவே செய்கின்றனர்.
சென்னை, ஏப்.28- தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திரைக்கலைஞர் ஜோதிகா, தஞ்சை அரசு மருத்துவமனையின் அவலமான நிலையைக் கண்டு தாம் வருந்தியதாகவும், கோவில் களுக்கு செலவு செய்து பராமரிப்பது போல அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசுப் பள்ளிகளையும் பராமரிக்க வேண்டும் என்ற பொருளில் கூறியுள்ளார். இதனை சிலர் திரித்து, ஜோதிகா கோவில்களுக்கு எதிராக பேசிவிட்டது போல விஷமப் பிரச்சாரத்தில் ஈடு பட்டுள்ளனர். இந்நிலையில் ஜோதிகா கூறிய கருத்தில் நாங்கள் உறுதியாகவே இருக்கிறோம் என்று திரைக் கலைஞருமான அவரது கணவருமான சூர்யா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
‘மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதாக இல்லை’ என்கிற கருத்து சமூக ஊடக விவா தங்களுக்கு அப்படியே பொருந்தும். ஒரு விருது வழங்கும் விழாவில் எப்போதோ ஜோதிகா அவர்கள் பேசியது, இப்போது ஊடகங்களில் செய்தியாகவும், சமூக ஊடகங்களில் விவாதமாகவும் மாறி இருக்கிறது.
‘கோவில்களைப் போலவே பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் உயர்வாக கருத வேண்டும்’ என்கிற கருத்தை ஜோதிகா வலியுறுத்தி யதை, சிலர் குற்றமாக பார்க்கிறார்கள்.
இதே கருத்தை விவேகானந்தர் போன்ற ஆன்மீகப் பெரியவர்களே சொல்லியிருக்கி றார்கள். ‘மக்களுக்கு உதவினால், அது கட வுளுக்குச் செலுத்தும் காணிக்கை’ என்பது திருமூலர் காலத்து சிந்தனை. நல்லோர் சிந்தனைகளைப் படிக்காத, காதுகொடுத்து கேட்காதவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை.
பள்ளிகளையும், மருத்துவமனைகளை யும் இறைவன் உறையும் இடமாக கருத வேண்டும் என்கிற கருத்தை, எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் வரவேற்கவே செய்கின்றனர். கொரோனா தொற்று காரண மாக இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப் பட்டுள்ள இந்த நேரத்திலும், எங்களுக்கு கிடைத்த பேராதரவு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளித்தது. அறிஞர்கள், ஆன்மீகப் பெரிய வர்களின் எண்ணங்களைப் பின்பற்றி வெளிப்படுத்திய அந்தக் கருத்தில் நாங்கள் உறுதியாகவே இருக்கிறோம்.
மதங்களைக் கடந்து மனிதமே முக்கியம் என்பதையே எங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லித்தர விரும்புகிறோம். தவறான நோக்கத்தோடு, தரக்குறைவாக சிலர் அவ தூறு பரப்பும் போதெல்லாம், நல்லோர்கள், நண்பர்கள், ரசிகர்கள் எங்களுக்கு துணை நிற்கிறார்கள். முகமறியாத எத்தனையோ பேர் எங்கள் சார்பாக பதில் அளிக்கி றார்கள். ஊடகங்கள் சரியான விதத்தில் இச்சர்ச்சையைக் கையாண்டன. நல்ல எண்ணங்களை விதைத்து நல்ல செயல் களை அறுவடை செய்ய முடியும் என்கிற நம்பிக்கையை இவர்களே துளிர்க்கச் செய்கிறார்கள். எங்களுக்கு உறுதுணை யாக நிற்கும் அனைவருக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஜோதிகாவை இழிவுபடுத்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுத்திடுக!
மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
சென்னை, ஏப்.28- திரைக்கலைஞர் ஜோதிகாவை இழிவு படுத்துவோர் மீது தமிழக அரசும் காவல்துறை யும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:
விருது வழங்கும் விழா ஒன்றில் திரைக்கலை ஞர் ஜோதிகா பேசியதை, அண்மையில் ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது. தஞ்சாவூ ருக்கு படப்பிடிப்பு ஒன்றில் பங்கேற்கச் சென்ற போது அங்குள்ள அரசு மருத்துவமனையின் அவலமான நிலையைக் கண்டு தாம் வருந்தி யதாகவும், கோவில்களுக்கு செலவு செய்து பரா மரிப்பது போல அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசுப் பள்ளிகளையும் பராமரிக்க வேண்டும் என்ற பொருளில்தான் அவர் பேசியுள்ளார்.
ஆனால் அவருடைய பேச்சை முன்னும் பின்னுமாக வெட்டி திரித்து அவர் கோவில் களுக்கு எதிராக பேசிவிட்டது போல சிலர் விஷ மப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அவரது பேச்சை முழுமையாகக் கேட்கும் யாரும் எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தின் வழிபாட்டுத் தலங்க ளுக்கு எதிராகவும் அவர் பேசவில்லை என்பதை புரிந்து கொள்ள முடியும். அரசு மருத்துவமனை கள், பள்ளிகளின் அவசியத்தையும் மக்கள் அதைப் பாதுகாக்க வேண்டியதன் தேவையை யும் வலியுறுத்தியுள்ளார். இதில் எந்தத் தவறும் இல்லை.
இன்னும் சொல்லப்போனால், கொடூர மான இந்த கொரோனா காலத்தில் அரசு மருத்து வமனைகளின் அருமையை அனைவரும் உணர்ந்துள்ளனர். அந்த மருத்துவமனைகளின் தரம் உயர்த்தப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகும்.
கொரோனா காலத்தில் மத்திய-மாநில அரசு களின் போதாமை அம்பலமாகி வரும் நிலை யில் அதை திசை திருப்புவதற்காகவே சமூக ஊட கங்களில் சில மதவெறி சக்திகள் இந்தப் பிரச்ச னையை ஊதி பெரிதாக்கி மக்களது கவனத்தை திசை திருப்ப முயல்கின்றன. ஜோதிகாவையும் அவருடைய குடும்பத்தினரையும் இழிவுபடுத் தும் வகையில் அநாகரீகமான பதிவுகளை சமூக ஊடகங்களில் சிலர் எழுதி வருகின்றனர்.
அனைத்து இந்தியக் குடிமக்களுக்கும் தங்க ளுடைய கருத்தை வெளிப்படுத்த உரிமை உண்டு. அதற்கு மாற்றுக் கருத்து இருந்தால் நாக ரீகமான முறையில் மறுப்புச் சொல்லி விவாதிக்க லாம். கடவுள் உண்டா, இல்லையா என்கிற விவா தம் கூட பன்னெடுங்காலமாக நடந்து வருகிறது. இத்தகைய விவாதங்களை இப்போதும் நடத்து வதற்கான உரிமையை நம்முடைய அரசியல் சாசனம் வழங்கியுள்ளது.
ஆனால், சமீபகாலமாக சாதி, மத, இனவெறி சக்திகள் ஒருவரது கருத்தை திரித்துக் கூறு வதும், அவதூறு மூலம் அவரது வாயை அடைக்க முயல்வதும் நடந்து வருகிறது. இது ஆரோக்கியமானதல்ல.
திரைக் கலைஞர் ஜோதிகாவை இழிவு படுத்துவோர் மீது தமிழக அரசும் காவல்துறை யும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துவதோடு, கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்க நடைபெறும் போராட்டத்திற்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய முழுமை யான ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.