புதுதில்லி,ஜூலை 21- தண்ணீர் மாசுபாட்டால் மீன்களுக்கும் கேன்சர் நோய் ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் மாசுபாடு நீர் வாழ் உயிரினங்களுக்கும் பெரும் ஆபத்தாக உள்ளது. ஜபல்பூரில் உள்ள ஃபிஷரி சயின்ஸ் கல்லூரி நடத்திய ஆய்வில் தண்ணீர் மாசுபாடு மீன்களுக்கு புற்றுநோயை உண்டாக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் இறந்த மீன்களை பரி சோதித்தபோது, தோல் புற்றுநோயால் மீன்கள் இறந்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.