tamilnadu

img

ஆந்திராவின் ஸ்ரீசைலம் அணையிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு

ஐதராபாத், ஆக.10- தமிழகத்தின் வேண்டுகோளை ஏற்று ஸ்ரீசைலம் அணையில் இருந்து தமிழகத் துக்கு உடனடியாக தண்ணீர் திறக்க ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தர விட்டுள்ளார். இந்த உத்தரவை அடுத்து ஆந்திராவின் ஸ்ரீசைலம் அணையில் இருந்து விநாடிக்கு 7 ஆயிரம் கன அடி நீர் தமிழகத்துக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது. தெலுங்கு கங்கா திட்டத்தின் கீழ் ஆந்திர மாநில கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் ஒவ்வொரு ஆண்டும் 12 டிஎம்சி தமிழகத்துக்கு தர வேண்டும். கடந்த ஜூலை 1-ஆம் தேதியில் இருந்து முதல் தவணை காலம் தொடங்கியது. இந்தத் தவணை காலத்தில் 8 டிஎம்சி நீர் தமிழ கத்திற்கு ஆந்திர அரசு தர வேண்டும். தற் போது சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் ஒப்பந்தப்படி தண்ணீர் தரும் பட்சத்தில் சென்னை குடிநீர் பிரச்சனையை சமாளிக்க முடியும்.  

அதே வேளையில் ஆந்திர அணைகளில் போது மான அளவு தண்ணீர் இருந்த காலங்களில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப் பட்டுள்ளதாக அந்த மாநில அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தநிலையில் தற்போது சென்னை யில் ஏற்பட்டுள்ள குடிநீர்த் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக கிருஷ்ணா நதி நீரை திறந்துவிட வலியுறுத்தியும், பாலாற்றில் கட்டப்படும் தடுப்பணையைக் கைவிட வலி யுறுத்தியும், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை விஜயவாடாவில் உள்ள அவரது இல்லத்தில் தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார் ஆகி யோர் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசி னர்.  இந்த சந்திப்பைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களிடம் கூறுகை யில், ஸ்ரீசைலத்தில் இருந்து சோமசீலாவுக்கு வரும் நீரானது கண்டலேறு மூலமாக நமக்குக் கிடைக்கும். இந்த தண்ணீரைத் தர அதிகாரிகளுக்கு ஆந்திர மாநில முதல் வர் உத்தரவிட்டுள்ளார். ஸ்ரீசைலத்துக்கு இப்போது 2.97 டிஎம்சி நீர் வந்து கொண்டி ருக்கிறது. ஜூலை முதல் அக்டோபர் வரை யிலான காலத்துக்குள் தமிழகத்துக்கு 8 டி.எம்.சி., தண்ணீர் தர வேண்டும். அந்தத் தண்ணீர் நமக்கு நிச்சயம் கிடைக்கும் என்றார்.