பிரதமரை கிண்டலடித்த பிரகாஷ் ராஜ்
பெங்களூரு, நவ.9- கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி பணமதிப்பு நீக்க நடவடிக்கையை பிர தமர் மோடி அறிவித்தார். ஊழல், கறுப்புப் பணம், கள்ளப்பணம் ஆகியவற்றை ஒழிக்கவே இந்த நடவடிக்கை என்று அப்போது அவர் கூறினார். ஆனால், 2019 நவம்பர் 8-ஆம் தேதி யுடன் 3 ஆண்டுகள் முடிந்தும், பிரதமர் சொன்னது ஒன்றுகூட நடக்கவில்லை. இதனைக் குறிப்பிட்டு நடிகர் பிரகாஷ் ராஜ், பிரதமர் மோடியை, தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டலடித்துள்ளார். “கிடுகிடுவென உயரும் விலைவாசி... வேலையில்லாத் திண்டாட்டம்... வங்கி மோசடிகள்... பயமுறுத்தும் பண மதிப்பு நீக்க நடவடிக்கை... கும்பல் கொலைகள்... பதவி வெறி... அடக்குமுறைகள்.. ஆனால்... ஆனால்... ஆனால்... தயவு செய்து காத்திருக்கவும்.. ஏனென்றால், மாபெரும் தலைவர் உறுதியளித்திருக்கி றார். 2020-ஆம் ஆண்டு இந்திய நாடு மாபெரும் வல்லரசாகி விடும். இன்னும் 2 மாதங்களே உள்ளன... நாம் கொண்டாடக் காத்திருக்க வேண்டும்” என்று பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.