ஆணும் பெண்ணும் சமம் என்று அரசி யல் அமைப்புச் சட்டம் கூறினாலும் நடைமுறையில் அது பின்பற்றப்படாத சூழலே நிலவுகிறது. பாலினப் பாகுபாடு வன்கொடுமைகளால், வன்புணர்வுகளால், குடும்ப வன்முறைகளால், இப்படி எல்லா இடங்களிலும் பெண் சமத்துவம் சீர் குலைகிறது. பெண்கள் பொருளாதாரத்தில் தற்சார்பு பெற்றவர்களாக இருந்தாலும் திருமண பந்தத்திற்குள் வந்த பின்னர் அவர்களது பொருளாதார சுதந்திரம் பறிக் கப்படுவதை பெரும்பாலான இடங்களில் காண்கிறோம். சர்வதேச பொருளாதார கூட்டமைப்பின் பாலின பாகுபாடு குறியீட்டில் இந்தியா 108-வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறையை கையாள நிறைய சட்டங்கள் இருந்தாலும் இந்தியா இன்னமும் ஆணாதிக்க சமூக மாகவே இருப்பதால்தான் சட்டத்தை அமல் படுத்துவதில் சிக்கல் இருக்கிறது என்கிறது ஆகஸ் பார்ம் என்ற அமைப்பு. இந்தியாவைப் பொறுத்தவரை நாட்டின் ஜிடிபியில் இந்தியப் பெண்களின் ஊதிய மற்ற வேலையின் பங்கு 3.1 சதவீதம் என்ற ளவில் உள்ளது. ஊதியமற்ற வேலை என்பது அன்றாடப் பணிகள், கடைக்குப் போகுதல், குடும்ப உறுப்பினர்களைப் பரா மரித்தல், வீட்டுவேலை மற்றும் வேறுபல வேலைகளையும் உள்ளடக்கியது ஆகும். நம் நாட்டின் 119 கோடீஸ்வரர்களில் 9பேர் மட்டுமே பெண்கள் என்கிறது ஆய்வு. மெக்கன்ஸி குளோபல் இன்ஸ்டிட்யூட் நடத்தி வெளியிட்ட ஆய்வானது உலக அளவில் சராசரியாக 40 சதவீதப் பெண்கள் வேலைக்குச் சென்று ஊதியம் பெறுகிறார் கள். ஆனால், இந்தியாவில் 24 சதவீத பெண்கள் மட்டுமே ஊதியம் பெறும் வேலை யில் இருக்கிறார்கள். மற்ற பெண்கள் விவ சாயத்திலும் பாதுகாப்பற்ற தினக்கூலி வேலையிலும் சொற்ப ஊதியத்துக்கு வேலை பார்த்து வருகிறார்கள். பெண்கள் பார்க்கும் ஊதியமில்லாத வேலைகளின் மதிப்பு ரூ.19.85 லட்சம் கோடி என்கிறது. இன்றைக்கும் பாகிஸ்தானின் பாடப் புத்தகத்தில் வீரமும் ஆற்றலும் வாய்ந்தவ ராக ஆண் அரசியல்வாதிகள் சித்தரிக்கப் பட்டிருக்கிறார்கள். துருக்கி நாட்டின் பாடமோ சிறுவன் ஒருவன் மருத்துவராகக் கனவு காணும் வேளையில் சிறுமி தான் மணமகளாகப் போவதாகக் கனவு காண்ப தைப் பதிவு செய்கிறது. தான்சானியா பாடப் புத்தகங்கள் கூட மாணவர்களை வலிமை யானவர்களாகவும் விளையாட்டு வீரர்க ளாகவும் மாணவிகளை அலங்கார உடை களைப் பார்த்து பெருமை கொள்பவராக வும் சித்தரிக்கின்றன. ஹெய்தியிலுள்ள பாட நூல்களோ அப்பாக்கள் அலுவலகம் செல்வதாகவும் அம்மாக்கள் வீட்டைப் பராமரிப்பதாகவும் குழந்தைகளுக்குக் கற்றுத் தருகின்றன. இப்படியாக உலகம் முழுமையும் பெண்களை இயல்பா கவே ஒரு சமத்துவ நிலையை அடையாவண் ணம் வைத்திருக்கிறது. இந்தியாவும் இதில் விதி விலக்கு அல்ல. இந்தியாவில் கல்வியை பொறுத்த மட்டில் தொடக்க நிலைக் கல்வியை ஆண்க ளைவிட பெண்கள் அதிக எண்ணிக்கையில் முடிக்கிறார்கள். மேல்நிலைக் கல்வியை முடிப்பவர்களில் ஆண்கள் 58.9 சதவீதம். பெண்கள் 41.1 சதவீதம், குறிப்பாக தொடக்கக் கல்விக்குப் பிறகு மாணவிகளின் இடை நிற்றல் அதிகமாகிறது. இந்திய பொறியியல் நிறுவனங்களில் பணியாற்றும் ஆண், பெண் பொறியா ளர்களிடையே பாரபட்ச நிலை தொடர்வ தாக கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் பெண் பொறியாளர் சங்கத்தின் 2018-ஆம் ஆண்டு ஆய்வு தெரிவிக்கிறது. உதாரண மாக இந்தியாவில் பணிபுரியும் ஆண், பெண் பொறியாளர்களில் நான்கில் மூன்று பேர், தாங்கள் சக பணியாளர்களுக்கு சமமா னவர்கள் என்பதை நிரூபிக்க தொடர்ந்து போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்தியாவில் அதிகளவு பெண்கள் அமைப்புசாரா தொழிலில்தான் ஈடுபட்டுள் ளனர். இத்தகைய இடங்களில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் பெண்கள் வேலையை விட்டுச் செல்கின்றனர். இல்லை யேல் தொடர்ந்து சிக்கலிலேயே வதைபடு கின்றனர். கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியாவில் பெண் தொழிலாளர் பங்க ளிப்பு 34.8 சதவீதத்திலிருந்து 27 சதவீதமாகக் குறைந்துவிட்டதாக உலக வங்கி அறிக்கை தெரிவிக்கிறது. என்னதான் சமத்துவம் பேசப்பட்டாலும் ஊதிய பாகுபாடு என்பது இன்றும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அதுவும் சமீப வருடங்களாக இந்த பாகுபாடு உயர்ந்துள்ளதாக டைம்ஸ் ஜாப் நடத்திய ஆய்வில் குறிப்பிட்டுள்ளது. நம் நாட்டில் பாலின ரீதியாக வருவாய் வித்தியா சம் 34 சதவீதமாக உள்ளது. அதாவது ஆண் களை விட பெண்கள் மிகக்குறைந்த கூலி பெறுகிறார்கள். இத்துடன் சாதி, மதம், வயது ஆகியனவும் பெண்களை வதைக்கிறது. ஆண்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது பொருள் ஈட்டுவது, உழைப்பது, கல்வி கற்பது என்று எதிலும் பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதே நிதர்ச னம் என்றாலும் போராடி தங்கள் உரிமைக ளைப் பெறக்கூடிய நிலையிலேயே நம் நாட்டில் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை மறுக்கமுடியாது. எந்த நாடுகளெல்லாம் ஆண், பெண் பேதமின்றி சம வாய்ப்புகளை வழங்குகிற தோ அந்த நாடுகளே பொருளாதாரத்திலும் கலாச்சாரத்திலும் சிறந்து விளங்குகின்றன என்கிறார் மெக்கன்ஸி குளோபல் இன்ஸ்டி யூட்டின் மூத்த ஆய்வாளர். பெண்களுக்கு சமத்துவம் அளித்தால் அதுவே தேசம், வளம் பெற அடித்தளமாக இருக்கும் என்கி றார் பெண்ணினப் போராளி அனு மத்காவ் கர். இந்த திசைவழியில் உரியவாறு விவாதித்து பெண் சமத்துவத்தை மேலும் முன்னெடுப்பதற்கு சனியன்று (செப்-14) புதுக்கோட்டையில் நடைபெறும் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ் மாநில சிறப்பு மாநாடு வழிகாட்டும்.