tamilnadu

img

நடிகை ரியாவுக்கு  ஜாமீன் வழங்க மறுப்பு

மும்பை:
போதைபொருள்கள் வாங்கிய வழக்கில் நடிகை ரியாவுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்தி நடிகை ரியா கடந்த செவ்வாய்க்கிழமையன்று போதை பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். அவர் தற்கொலை செய்துகொண்ட இந்தி நடிகர் சுஷாந்த் சிங்கிற்கு போதைப்பொருள் வாங்கியதாகவும், அதற்காக பணம் கொடுத்ததாகவும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் விசாரணையின் போது அதனை ரியா ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.இந்தநிலையில் சிறையில்  உள்ள ரியா தனதுவழக்கறிஞர் மூலம் ஜாமீன் கேட்டு மும்பை செசன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.அதில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தன்னிடம் கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெற்றதாகவும் தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.  இந்த மனுவை வெள்ளியன்று விசாரித்த  மும்பை செசன்ஸ் நீதிமன்றம், ரியாவுக்கு ஜாமீன்வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டது.

;