2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரைமோட்டார் வாகன சட்டத்தைத் திருத்தக்கூடாது என போராடியதுடன், 2019 தேர்தலில் பாஜக அதீத பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த நிலையில் மோட்டார் வாகன சட்டத்தை திருத்திவிட்டது.நாம் எச்சரித்த ஆபத்துக்கள் இப்போதுதுவங்கிவிட்டன.
தற்போது மோட்டார் தொழிலில் உள்ள சிறு முதலாளிகள் முதல் இருசக்கர வாகன உரிமையாளர் வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்துறையில் உள்ள டிரைவர், மெக்கானிக், எலக்ட்ரீசியன், பெயிண்டர்,டிங்கர், கட்டுதட்டுபவர், டயர் பஞ்சர் பார்ப்பவர் உள்ளிட்ட தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது பெரும்பகுதியான ஆர்டிஓ அலுவலக வேலைகள் ஆன்லைன் மூலமாகவே நடைபெறுகிறது. ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல், வாகனதகுதிச் சான்று (எப்சி), அனுமதிச் சான்று (பெர்மிட்) உள்ளிட்ட அனைத் தும் மத்திய அரசின் வாகன பரிவார்,சாரதி ‘ஆப்’புகள்தான் பார்க்கின்றன.எரியும் வீட்டில் பிடுங்கியது லாபம்என்ற முறையில் ஆர்டிஓ அலுவலகங்களில் எல்லாமே விலை ஏறிவிட்டது. ஆப் வேலை செய்யவில்லை, 5 நாள் கழித்து வா என்பதும்; மாநிலஅரசு எதைப்பற்றியும் கவலைப்படாமல், வசூல் வந்தால் சரி என்றும் உள்ளது.குறிப்பாக ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தலுக்கும் லஞ்சம் கொடுக்காமல், இடைத்தரகர் இல்லாமல் வாங்க முடியாத சூழல் உருவாகிவிட்டது. எப்சிக்கு ஸ்டிக்கர் ஒட்டுதல், ஆர்டிஓ எங்கு, எந்தவிதமாக என்ன விலை (அதிக விலைதான்) கொடுத்து வாங்கசொல்கிறாரோ அங்குதான் வாங்க வேண்டும். ஓடாத ஸ்பீடு கவர்னர் ஒவ்வொரு எப்சிக்கும் மாட்ட (மாற்ற) வேண்டும். அதுவும் ஆர்டிஓ அலுவலகம் சொல்லும் நிறுவன பொருள்களைத் தான் பொருத்த வேண்டும்.
\அதேபோல் வாகனம் எப்சிக்குதயார் செய்யும்போது ஆர்டிஓ அலுவலகம் குறிப்பிடும் கம்பெனியின் ஸ்பேர் பார்ட்ஸ் (பிரேக், க்ளட்ச்) உள்ளிட்ட பொருட்களை வாங்கியிருக்க வேண்டும் (அ) வாங்கியதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என ஏராளமான நிபந்தனைகள் இந்தகொரோனா காலத்திலும் ஏகபோகமாக நடைபெற்று வருகிறது.எத்தனை போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் செய்தாலும் மாநில போக்குவரத்து ஆணையர் முதல் ஆர்டிஓ அலுவலக அட்டெண்டர் வரைவண்டி ஓட வேண்டுமா, எங்களை மீறிஎதுவும் நடக்காது என்ற மமதையில் தான் உள்ளனர். இவற்றை முறியடிக்கமத்திய, மாநில அரசுகளின் முகத்திரையை கிழிக்க வரும் நவம்பர் 26 அன்றுஅகில இந்திய பொது வேலைநிறுத் தத்தில் அணி திரள்வோம்.
===வி.குப்புசாமி===
பொருளாளர், தமிழ்நாடு சாலைப்போக்குவரத்து சம்மேளனம்