tamilnadu

img

நடிகர் சூர்யா கருத்துக்கு திரை இயக்குநர்கள் ஆதரவு

சென்னை,ஜூலை 21-  தமிழ்நாடு இயக்குநர்கள் சங்க தேர்தலில் வாக்களித்த பின்னர் பேட்டியளித்த இயக்குநர்கள் ஒரே குரலில், தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை குறித்த நடிகர் சூர்யாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.  தமிழ்நாடு இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் ஜூலை  21 ஞாயிறன்று நடைபெற்றது. வடபழனியில் உள்ள இசை யமைப்பாளர் கட்டிடத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 2 ஆயிரத்து 45 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தேர்தலில் வாக்களித்த பின் செய்தியாளர்களை  சந்தித்த இயக்குநர்கள், தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை குறித்து நடிகர் சூர்யாவின் கருத்துக்களுக்கு ஆதரவாக பேசினர்.  கல்விக் கொள்கை குறித்து பேச சூர்யாவுக்கு முழு உரிமை உள்ளது என்று கூறினர்.  இதனிடையே தேசிய கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது பற்றி தனக்கு தெரியாது என்று இயக்குநர் ஷங்கர் கூறினார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சீமான், சூர்யாவின் கருத்து குறித்து தனக்கு தெரியாது என இயக்குநர் ஷங்கர் கூறியதைப் பற்றி பேசும் போது, உயர்ந்த நிலையில் உள்ள இயக்குநர்களுக்கு சமூகப் பொறுப்பு அவ்வளவு தான் என்று தெரிவித்தார்.