tamilnadu

img

கோவிட்-19 தொற்றால் தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மரணம்

கோவிட்-19 தொற்றல் பாதிக்கப்பட்ட தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் வேல்முருகன், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

தமிழகத்தில் கோவிட்-19 தொற்று நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. குறிப்பாக சென்னையில் மட்டும் இதுவரை 49,690 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 730 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், சென்னை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனமான ராஜ் டிவியின் ஒளிப்பதிவாளர் வேல்முருகன் (40 வயது) கோவிட்-19 தொற்று காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 15 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று (26-ஆம் தேதி) சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது மரணத்திற்கு பத்திரிகையாளர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கோவிட்-19 தொற்றுக்கு தமிழகத்தில் முதன்முதலாக ஒரு ஊடகவியலாளர் பலியாகியிருப்பது, அனைத்து தரப்பினரையும் வேதனையடைய வைத்திருக்கிறது.

;