tamilnadu

img

மேற்கு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை:
தமிழகத்தில் தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்குத் தென்மேற்குப் பருவக் காற்று காரணமாகக் கோவை, நீலகிரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவித்துள்து.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகப் பட்சமாகக் கோவை மாவட்டம் சின்ன கல்லாறில் 2 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஜூன் 15ஆம் தேதி வரை கேரளக் கடற்கரையோரம், லட்சத் தீவு, அரபிக் கடல் பகுதிகளில் பலத்த சூறைக் காற்று வீசக் கூடும் என்பதால் அந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. சென்னையில் மாலை நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது.

;