tamilnadu

img

தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு....  

சென்னை
தமிழகத்தில் காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. 

கோவை, நீலகிரி, தேனி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடனும், ஒரு சில பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும். குறிப்பாக மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் (இப்பகுதிக்கு) கடலுக்கு செல்ல வேண்டாம். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் தேவாலா (நீலகிரி), சின்னக்கல்லார், வால்பாறை (கோவை), கலசப்பாக்கம் (திருவண்ணாமலை) ஆகிய இடங்களில் தலா 4 சென்டி மீட்டர் அளவிற்கு மழை பெய்துள்ளது எனவும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. 

படம்  :  தேவாலா (நீலகிரி)

;