tamilnadu

img

விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் திட்டமிடல் தவறா?

நாட்டில் புதிதாகப் பொறுப்பேற்றள்ள மோடி அர சாங்கத்தின் பொருளாதார நிகழ்ச்சிநிரல் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து எண்ணற்ற விவாதங்களை, அநேகமாக ஆட்சியாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்று கட்டளையிடுவதுபோன்ற கருத்துக்களை, கார்ப்பரேட் ஊடகங்கள் ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன. அநேகமாக நாட்டில் உள்ள அனைத்துத் துறைகளையும் தனியாரிடம் தாரை வார்த்திட வேண்டும் என்பது போலவும், நாட்டின் பொருளாதாரத்தையே, கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைத்துவிட  வேண்டும் என்பது போலவும் அவற்றின் அறிவுரைகள் காணப்படுகின்றன.     இவர்களின் அறிவுரைகளில் உள்ள அம்சங்கள் குறித்து ஆய்வு செய்வதற்கு முன்னால், நாட்டின் தற்போதைய நிலை மைகள் என்ன என்பது குறித்து சற்றே ஆய்வு செய்திடு வோம். நாட்டின் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெ டுப்பின்படி, மொத்தம் உள்ள மக்கள்தொகையில் 69 சத வீதத்தினர் (83 கோடியே 37 லட்சம் பேர்) கிராமப்புறங்களில் வாழ்கிறார்கள். கிராமப்புறங்களில் உள்ள உழைக்கும் மக்கள் 48 கோடியே 19 லட்சம் பேர்களில் 26 கோடியே 31 லட்சம் பேர் -  அதாவது 54.6 சதவீதத்தினர் விவசாயிகள் என வகைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். இவர்களில் சுமார் 14 கோடியே 43 லட்சம் பேர், அதாவது 55 சதவீதத்தினர், விவசாயத் தொழிலாளர்கள். மீதம் உள்ள 11 கோடியே 88 லட்சம் பேர் விவசாயிகள்.

நிலத்தை நம்பி வாழுகின்ற இந்த விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் முன்னுரிமை கொடுத்து ஆட்சியாளர்கள் கொள்கைகளை வகுக்க வேண்டும் என்று கூறினால் அது தவறாகுமா? பாஜக, 2019 மக்களவைத் தேர்தலையொட்டி வெளி யிட்டிருந்த தேர்தல் அறிக்கையில் விவசாயத்தின் முக்கி யத்துவத்தை அங்கீகரித்திருந்தது. விவசாயிகளின் வருமா னத்தை இரட்டிப்பாக்குவோம் என்கிற தன்னுடைய உறுதி மொழியை மீண்டும் குறிப்பிட்டிருந்தது. ஆனாலும் எப்படி இரட்டிப்பாக்குவார்கள் என்று எதுவும் அது கூறிடவில்லை. தேர்தலுக்கு முன்னர் 2019-20 பட்ஜெட்டின்போது அது அறி வித்திருந்த வருமான ஆதரவு திட்டம் (income support scheme), நில உடைமையாளர்களுக்கு எவ்விதமான உச்ச வரம்பும் இன்றி பயனளிக்கக்கூடிய ஒன்றாக இருந்தது. இது நிச்சயமாக மிகவும் படுபிற்போக்கான நடவடிக்கையா கும். நேரடி ரொக்கம் வழங்கல் எந்த விதத்திலும் வேளாண் வளர்ச்சிக்கோ அல்லது தனிப்பட்டமுறையில் விவசாயிக ளுக்கோ உதவிடாது. மேலும் இத்திட்டமானது நில உடைமை யாளர்களுக்கு மட்டுமே பயனளிக்கக்கூடியதாகும். குத்தகை விவசாயிகளுக்கு இதனால் எவ்விதப் பயனும் கிடையாது. எனவே இது ஆட்சேபணைக்குரிய ஒன்றாகும்.

விவசாயத்தில் முதலீடு
பாஜக தேர்தல் அறிக்கையானது விவசாயத்தின் உற்பத்தித் திறனை அதிகப்படுத்திட, விவசாயத்தில் முதலீடு செய்யப்படுவது அவசியம் என்று கூறுகிறது. இது முக்கியமான மற்றும் வரவேற்கத்தக்க ஒன்றுதான்.  இதற்கு 25 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்றும் அது குறிப்பிட்டி ருக்கிறது. ஆனால் அதனை அது எத்தனை ஆண்டுக் காலத்தில் முதலீடு செய்யும் என்று குறிப்பிடவில்லை. அதே போன்று அதனை எந்தவிதத்தில் முதலீடு செய்யப்போகி றார்கள் என்றும் குறிப்பிடவில்லை. இந்தத்தொகையை ஐந்து ஆண்டுகளில் முதலீடு செய்வார்களா? தெரியாது. இவ்வாறு கூறும் பாஜக தாங்கள் ஆட்சி செய்த 2014-19ஆம் ஆண்டுகளில் விவசாயத்துறையில் முதலீடு செய்த தொகை மிகவும் குறைவானதாகும். இப்போது இவர்கள் அறிவித்துள்ள தொகையில் 10 சதவீதம்கூட முதலீடு செய்திடவில்லை.விவசாயத்துறைக்கும் தொழில்நுட்பத் துறைக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்துவது தொடர்பாக பல்வேறு அறிக்கைகளை பாஜக அளித்துள்ள போதிலும், குறிப்பிட்டு எதுவும் கூறப்படவில்லை.

பாஜக அறிக்கையானது, தான் ஆட்சியிலிருந்த கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏற்பட்டுள்ள விவசாய நெருக்கடி குறித்து எதுவுமே குறிப்பிடவில்லை. தற்போதுள்ள விவ சாய நெருக்கடியின் தன்மையைப் பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாமல், இவர்கள் விவசாயத்தில் முன்னேற்றத்தை எப்படிக் கொண்டுவரப் போகிறார்கள் என்று தெரியவில்லை. விவசாய உற்பத்தியில் ஈடுபட்ட சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு, அவர்கள் விளைவித்த விவசாய விளைபொருள்களுக்கான உற்பத்திச் செலவினத்தைக்கூட அளித்திட ஆட்சியாளர்கள் தயாராயில்லை. விவசாயத்துடன் தங்களை இணைத்துக் கொண்டுள்ள விவசாயத் தொழி லாளர்களுக்கும் மிகவும் அற்ப அளவிலேயே ஊதியங்கள் வழங்கப்படுகின்றன. அவர்களின் வேலைநாட்களும் மிகவும் குறைவு.விவசாயத்துடன் தங்களை இணைத்துக் கொண்டுள்ள விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்க ளும் கடும் இழப்புகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இவர்க ளின் வாழ்க்கைக்கு உத்தரவாதத்தை அளிக்கக்கூடிய அள விலாவது குறைந்தபட்சம் இவர்களுடைய திட்டங்கள் அமைந்திட வேண்டும்.

செய்ய வேண்டியவை என்ன செய்திட வேண்டும்?


  விவசாயிகள் தங்களுடைய விளைபொருள்களுக்கு, போதுமான அளவிற்கு குறைந்தபட்ச ஆதார விலையைப் பெற்றிட வேண்டும். இது வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனின் தேசிய விவசாயிகள் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், உற்பத்திச் செலவினத்தை விட ஒன்றரை மடங்கு கூடுதலாக விளைபொருள்களின் குறைந்தபட்ச ஆதார விலைகள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.   விவசாய விளைபொருள்களை அரசாங்கமே இவ்விலைக்குக் கொள்முதல் செய்திட வேண்டும்.

 கிராமப்புற விவசாயத் தொழிலாளர்களுக்கும் மற்றும் இதர கிராமப்புற உழைக்கும் மக்களுக்கும் மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் ஒவ்வோராண்டும் போதுமான நாட்களுக்கு விலைவாசி யுடன் இணைக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்துடன் வேலை அளிக்கப்பட வேண்டும்.

நீர்ப்பாசன வசதிகள், விவசாயிகள் தாங்கள் விளைவித்த விவசாய விளைபொருள்களை நகரங்களில் உள்ள சந்தைகளுக்கு எடுத்துச் சென்றுவர நல்ல சாலை வசதிகள், விவசாயிகளின் விளைபொருள்களைப் பாது காத்திட குளிர்பதன வசதிகள் போன்றவற்றை பொது முதலீட்டின்கீழ் விரிவுபடுத்திட வேண்டும்.

நில உடைமையாளர்கள் மட்டுமல்லாது, குத்தகை விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகளுக்கும் தாங்கள் வாங்கி, இதுவரை செலுத்தாது இருக்கின்ற விவசாயக் கடன்க ளை ஒரே தவணையில் ஒட்டுமொத்தமாகத் தள்ளுபடி செய்திட வேண்டும். இதில் விவசாயிகள் தனியாரிடம் வாங்கி யுள்ள கடன்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அனைத்து விவசாயக் குடும்பத்தினருக்கும்  கட்டுப்படி யாகக் கூடிய செலவினத்தில் சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் கல்வி அளித்திட வேண்டும்.  

 தற்போது தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் வேட்டைக்காடாக உள்ள பயிர் இன்சூரன்ஸ் திட்டம் கைவிடப் பட்டு, அதற்குப் பதிலாக உண்மையில் விவசாயிகளுக்கு பயன்தரக் கூடிய விதத்தில் ஒரு வலுவான பயிர் இன்சூரன்ஸ் திட்டம் கொண்டுவரப்பட வேண்டும். Y  வறுமைக்கோட்டிற்குக் கீழ்/வறுமைக்கோட்டிற்கு மேல் என்று பாகுபடுத்தக்கூடிய முறையில்லாது அனைவருக் குமான பொது விநியோக முறை கொண்டுவரப்பட வேண்டும். அதன்கீழ் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் வலுவான முறையில் அமல்படுத்தப்பட வேண்டும்.

விவசாயத்துறைக்கு மிக அற்ப ஒதுக்கீடு

இது ஒரு நீண்ட பட்டியல் போன்று தோன்றக்கூடும். இதற்குத் தேவையான வளத்திற்கு எங்கே போவது என்று கேள்விகள் எழுப்பப்படக் கூடும். உண்மை என்ன தெரியுமா? கிராமப்புற மக்களில் பாதிக்கும் மேலானோர் தங்கள் வாழ்வா தாரத்திற்காக, விவசாயத்தையே நம்பி இருக்கும்நிலையில், விவசாயத்திற்காக மத்திய – மாநில ஆட்சியாளர்கள் ஒதுக்கீடு செய்திடும் திட்டச்செலவினங்கள் மிகமிக அற்பமாகும். மத்திய மாநில ஆட்சியாளர்கள் ஒட்டுமொத்தத்தில் விவசா யத்துறைக்கு ஒதுக்கீடு செய்யும் திட்டச் செலவினம் என்பது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(ஜிடிபி-)யில் 3 சதவீதத் திற்கும் குறைவேயாகும். மிகவும் சரியாகச் சொல்வதென் றால் 2 சதவீதத்தை ஒட்டித்தான் அது இருந்து வருகிறது. மத்திய- மாநில ஆட்சியாளர்களின் மொத்த செலவினங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 சதவீத அளவிற்கு இருந்திடும்போது, அவை விவசாயத்திற்கு செலவிடும் தொகை மட்டும் இவற்றில் பத்தில் ஒரு பங்குகூட இல்லை என்கிறபோது, மத்திய - மாநில ஆட்சியாளர்கள் விவசாயி கள், விவசாயத் தொழிலாளர்கள் குறித்து கவலைப்படுகி றார்கள் என்று எந்தவிதத்தில் கூற முடியும்?

அடுத்து மிகவும் முக்கியமாகக் குறிப்பிடவேண்டிய அம்சம் என்னவெனில், விவசாயப் பொருளாதாரத்தை உற்சாகமூட் டக்கூடிய விதத்தில், கார்ப்பரேட்டுகள் மற்றும் பெரும் பணக்கா ரர்களிடமிருந்து மிக அதிக அளவில் பொது வளங்கள் திரட்டப்பட வேண்டும். இத்தகு திசைவழியில் இதுவரையில் ஆட்சியாளர்கள் சிந்தித்ததே கிடையாது. பொருள் உள்ள வர்களுக்கும் பொருள் அற்றவர்களுக்கும் இடையே மிகப் பெரிய அளவில் சமத்துவமின்மையுடன் நம் நாடு விளங்கு கிறது. எனினும் பணக்காரர்கள்மீது செல்வ வரி (wealth tax) அல்லது பரம்பரைச்சொத்து வரி (inheritance tax) என எதுவும் நம் நாட்டில் விதிக்கப்படவில்லை. 2015-16ஆம் ஆண்டின் மத்திய பட்ஜெட்டின்போது நிதியமைச்சர் அருண் ஜெட்லி செல்வ வரியை ஒழித்துக் கட்டினார். மேலும் அவர், கார்ப்பரேட் வருமானம் மீதான வரி விகிதத்தையும், 250 கோடி ரூபாய் அல்லது அதற்குக் குறைவாக ஆண்டு பரி வர்த்தனை உள்ள அனைத்துக் கார்ப்பரேட்டுகளுக்கும் 25 சதவீதம் அளவிற்குக் குறைத்தார். தற்சமயம் நாட்டில் மத்திய – மாநில ஆட்சியாளர்கள் ஒட்டுமொத்தமாக வரிகள் மூலம் வசூலித்திடும் தொகை என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16 சதவீத அளவிற்குக்கூட கிடையாது. நம் நாட்டில் வசதி படைத்தவர்களிடமிருந்து வரிகளை வசூலித்திட வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன. இதனைச் செய்திடா மல் விவசாயப் பொருளாதாரத்தை மேம்படுத்திட வேண்டும் என்று பேசுவதெல்லாம் அடிப்படை எதுவுமற்ற அபத்தமான வைகளேயாகும். இறுதியாக, விவசாயிகளுக்கு ஒரு தடவை கடன் நிவார ணம் மற்றும் விவசாய விளைபொருள்களுக்கு உற்பத்திச் செலவினத்துடன் கூடுதலாக ஒன்றரை மடங்கு விலை நிர்ணயம் செய்து குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும் என்பதெல்லாம் விவசாயிகள் நலனின் ஒரு பகுதிதான். நாட்டிலுள்ள விவசாய நெருக்கடிக்குத் தீர்வு என்பது, விவசாயத்தில் உற்பத்தித் திறனை அதிகப்படுத்து வதன் மூலம் மட்டுமே செய்திட முடியும். இதன் ஒரு பகுதி, விவசாயத்துறைக்கும் கிராமப்புற உள்கட்டமைப்பு வசதிக்கும் மிகப்பெரிய அளவில் பொது முதலீடுகளை அதிகப்படுத்து வது. மற்றொரு பகுதி என்பது நிலத்தில் உள்ள ஏகபோகத்தை உடைத்தெறியக்கூடிய விதத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நிலச்சீர்திருத்தம். இத்தகைய நிலச்சீர்திருத்த நடவ டிக்கைகள் மூலம் மட்டுமே விவசாயத்தில் உற்பத்தித்திறனை அதிகரித்திட முடியும் என்பதையும், அதுவே ஜனநாயக முறையில் விரும்பத்தக்கது என்பதையும் சீனா, ஜப்பான், தென் கொரியா மற்றும் தைவான் போன்ற நாடுகளின் வரலாற்று அனுபவங்கள் நமக்குக் காட்டுகின்றன.

தமிழில்: ச.வீரமணி