தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரசால் 152 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடக, தில்லி மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சூழலில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாட்டில், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், சுற்றுலா தலங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவர் ஏற்கனவே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், தற்போது சென்னையில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் தில்லியில் இருந்து சென்னை வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.