எச்என்எல் கேரள அரசுக்கு சொந்தமாகிறது
திருவனந்தபுரம், நவ.17- காலப்போக்கில் இயந்திரங்கள் அனைத்தும் துருப்பிடித்து சிங்கவனம் டெசில் கம்பெனிபோல் எலும்புக் கூடாக மாறியிருக்கும் வெள்ளூர் எச்என்எல் (இந்துஸ்தான் நியூஸ்பிரிண்ட் லிமிட்டெட்). அத்த கைய அவலநிலைக்கு நிறுவனத்தை கொண்டுசெல்ல மத்திய அரசு தன்னால் முடிந்த மட்டும் முயன்ற போது கேரளத்தில் உள்ள அரசு யாரு டன் என்பதை வெள்ளூர் மக்களால் அறிந்துகொள்ள முடிந்தது. கடந்த ஓராண்டாக உற்பத்தியை நிறுத்தி வைத்து- தொழிலாளர் களுக்கு வேலை இல்லை என்கிற கொடுமையை அங்குள்ள மக்கள் நேரில் கண்டு வருந்தினர். குடும்ப செலவுக்கு பணமில்லை, குழந்தைகளின் கல்வி பாதிக்கப் பட்டது. கூலி வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் தொழிலாளர் களுக்கு ஏற்பட்டது. தொழிலாளர் களை கூட்டு தற்கொலைக்கு தள்ளுவதல்ல இடதுசாரி அரசின் நிலைப்பாடு என்பதை இன்று கேரளம் பார்த்துக்கொண்டிருக்கிறது.
எச்எல்எல் நிறுவனத்தை விற்கக் கூடாது என ஒரு தீர்மானத்தை கேரள அரசாங்கம் ஒருமித்த குரலில் சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. முதல்வரும் தொழில்துறை அமைச்ச ரும் மத்திய அரசுக்கு கடிதங்கள் எழுதினர். பிரதமரை சந்தித்து எச்என்எல் நிறுவனத்தை மாநில அரசிடம் ஒப்படைக்குமாறு முதல்வர் கேட்டுக்கொண்டார். நிறுவனத்தை விற்பதற்கான ஏலத்தில் பங்கேற்கு மாறு பிரதமர் கூறினார். நிறு வனத்துக்கு சொந்தமான இடத்தை மற்ற தேவைகளுக்கு பயன்படுத்தக் கூடாது. விற்கவோ, வாடகைக்கு கொடுக்கவோ முடியாது என்கிற நிபந்தனைகள் உள்ளதாக கேரள அரசு உயர்நீதிமன்றத்திலும், என்சி எல்டி நீதிமன்றத்திலும் (தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம்) வழக்குகள் தொடுத்தன. எச்என்எல் ஊழியர்களின் தொழிற்சங்கம் நிர்வா கத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் துவக்க காலத்தில் செய்த ஒப்பந்த நகல் தரப்படவில்லை.
சங்கத்தின் முன்னாள் செய லாளர் பி.சுரேஷ் ஆவண பாதுகாப்பு துறையிடமிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி ஒப்பந்த நகர் பெற்றார். அது தொழில்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இது ஆணித்தர மான தலையீடு செய்ய மாநில அர சுக்கு உதவியது. ஒப்பந்தத்தின் விவ ரங்களை தெளிவுபடுத்தி மாவட்ட ஆட்சியர் நிறுவனத்தின் பொது மேலாளர், லிக்குடேட்டர் (கடன் தீர்ப்பு அதிகாரம் பெற்றவர்) ஆகி யோருக்கு அறிவிப்பு செய்திருந்தார். நிறுவனத்தின் தேவைக்காக மாநில அரசு வழங்கிய நில ஒப்பந்தம் மீறப்பட்டால் நிலத்தை திரும்ப கை யகப்படுத்தும் அதிகாரம் அரசுக்கு உள்ளதை அந்த கடிதம் தெளிவு படுத்தியது. அதன்படி எச்என்எல் நிறுவனத்திடம் உள்ள 700 ஏக்கர் நிலம் மாநில அரசுக்கு உரியது என்கிற அரசின் நிலைப்பாடு கடுமை யானதால் லிக்குடேட்டர் பணிந்தார்.
அதன்படி மாநில அரசு ஏற்க விருக்கும் இந்நிறுவனத்தின் 364 நிரந்தர தொழிலாளர்கள், 400க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதி மக்களுக்கும் ஆலைச் சங்கொலி தொடரும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. திங்களன்று (நவ.18) தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம் வழங்கவிருக்கும் தீர்ப்பு இவர்களது கனவை நனவாக்கும்.