தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில், கோவிட்-19 தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்த அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு, கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. அவருக்குக் காய்ச்சல் இருந்ததாகவும், நேற்று காலை அவருக்கு கோவி-19 தொற்று இருப்பது பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் இதற்கு பதிலளித்த அவர், தனக்கு கோவிட்-19 அறிகுறிகள் எதுவும் இல்லை, நல்ல உடல் நலத்துடன் வீட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.