tamilnadu

img

பேய்களின் ஒப்பாரி முடியட்டும்! - பேரா. விஜய் பிரசாத்

மனிதகுலம் ஒரு முக்கிய வரலாற்றுத் தருணத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்; நாகரிகமின்மை அல்லது கூட்டுறவு மற்றும் ஒற்றுமை இவையிரண்டில் ஒன்றே நாம் முன்செல்லவேண்டிய பாதையாக தேர்ந்தெடுக்க வேண்டும்

ஜூன் 1958 அன்று, ‘ரென்மின் ரிபாவ்’ (மக்களின் தினசரி) நாளிதழில், சீனாவின் ஜியாங்சி மாகாணம் யூகியாங்கில் ஒட்டுண்ணி வகை நோயான பில்காசியா நோய் முற்றிலு மாக ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை மா சே துங் படித்தறிந்தார். அது ஏற்படுத்திய மகிழ்ச்சியில், ‘நோயின் கடவுளே விடைகொடு’ என்றொரு கவிதையை எழுதினார்: நூற்றுக்கணக்கான கிராமங்கள் களைகளால் திணறின, மக்கள் அழிந்தொழிந்தனர்; ஆயிரமாயிரம் வீடுகள் வெறிச்சோடிக்கிடக்க, பேய்கள் ஒப்பாரி பாடின.

- நோயின் கடவுளைக் கேட்டோம், ‘எங்கே செல்கிறாய் நீ’ எரியும் காகிதக் கப்பல்கள், வானில் பரவும் விளக்கொளி. ஹூனான் மாகாணம் ஷாவ்ஷானில் பிறந்துவளர்ந்த மா சே துங், சீன கிராமப்பகுதிகளை நூறாண்டுகளுக்கு மேலாக வாட்டியெடுத்த பில்காசியா மற்றும் பிற நோய் தொற்றுகளின் பயங்கரத்தைப் பற்றி நன்குஅறிந்திருந்தார்.  அந்நோயை ஒழிப்பதில் கம்யூனிஸ்டுகள் முனைப்புடன் இருந்தனர். 1930களில் மா சே துங் சீன  கம்யூனிஸ்ட் கட்சியின் பொது சுகாதாரக் குழுவில் இணைந்தார்; 1934-இல், ஜியாங்சி சோவியத்தில் (ஜியாங்கி கிராமக்குழு) இருந்தபோது அவர், கட்சிப்பணி யில் பொது சுகாதாரத்திற்கு முதன்மை அளித்தார். 

சீனாவின் நான்கு இலக்குகள்
1950இல் புதிதாக ஆட்சிக்கு வந்த கம்யூனிச அரசு, முதல் தேசிய சுகாதாரக் கூட்டத்தை ஒருங்கிணைத்தது. அதில் நான்கு முக்கிய கொள்கைகள் ஒப்புக்கொள்ளப்பட்டன:                                                                              1.சுகாதார மற்றும் மருத்துவப் பணியாளர்கள் கோடிக்கணக்கான உழவர் மற்றும் தொழிலாளர் களுக்காகவே பணியாற்றவேண்டும்.
2. நோய் தடுப்பே அவசியம்.
3. நவீன மற்றும் மரபுசார்ந்த மருத்துவர்களென இருசாராரும் வளர்த்தெடுக்கப்படவேண்டும்.
4. மருத்துவ பணியாளர்களின் பங்குடன் சுகாதாரப் பணி` மக்கள் இயக்கமாக நடத்தப்படவேண்டும்.

மார்ச் 1952இல், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நோய்தொற்றுத் தடுப்புக் குழுவொன்றை நிறுவி, தேசப் பற்றுடைய பொது சுகாதாரப் பிரச்சாரத்தை தொடக்கி வைத்தது. மலேரியா, டைபாய்டு, பில்காசியா போன்ற நோய்தொற்றுகள் பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டன அல்லது ஒழிக்கப்பட்டன. பிளேக் காலரா போன்ற நோய்களை சீனா வென்றதில், வாழ்க்கைத்தரத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் பெரும்பங்கு வகித்தது; ஆனால் புதிய நோய்கள் வந்துவிட்டன, அவை  பல பலத்த பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. புதிய கொரோனா கிருமிதான், இப்பெரும் ஊரடங்கின் இயக்குநர். இக்கிருமி பற்றிய முதல் தடயம்  2019 டிசம்பர் மாதக் கடைசியில்  வுகானில் உள்ள மருத்துவர்களுக்குக் கிடைத்தது; அடுத்த சில நாட்களில், சீன அரசு இதைப்பற்றி உலக சுகாதார அமைப்பிடம்(WHO) தெரிவித்தது. நோய்ப் பரவல் ஏற்படத் தொடங்கிய சில வாரங்களில், வுகான் நகரம் உட்பட ஹுபேய் மாகாணத்தினை தனிமைப்படுத்தியது; மேலும் அரசு வளங்களையும், மக்கள் செயல்பாடையும் கொண்டு இந்நோய் பரவலைத் தடுக்க முனைந்தது. 1950 தேசிய சுகாதார கூட்டத்தின் நான்கு கொள்கைகளின் தாக்கமும் சீனாவின் தடுப்பு நடவடிக்கைகளில் இப்போது நன்கு வெளிப்பட்டன.

கனவுலகில் மிதந்தவர்கள்
இந்நோயின் தீவிரத்தன்மை குறித்து உலக சுகாதார அமைப்பு ஜனவரி மாதத் தொடக்கத்தில் உலக  நாடுகளுக்கு எச்சரித்து, ஜனவரி 30ஆம் தேதி நெருக்கடி நிலையை அறிவித்தது. அன்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், “நிலைமை எங்களது கட்டுப்பாட்டிலே உள்ளது என்றே நாங்கள் நினைக்கிறோம்’’ என்று  கூறினார். முதலாளித்துவ அரசுகள் பிதற்றிக்கொண்டிரு ந்தன; டிரம்ப், பிரேசிலின் ஜெய்ர் பொல்சொனாரோ போன்றோர் முதலாளித்துவ அறிவியல் தகவல்களுக்கு செவிமடுக்காது, கனவுலகில் மிதந்து கொண்டிருந்தனர். ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்கள் முழுவதுமே டிரம்ப் இப்பிரச்சனையின் தீவிரத்தை மறுதலித்துக் கொண்டே இருந்தார். அவரது டிவிட்டர் பக்கத்தில் இதற்கான ஆதாரங்கள் அனைத்தும் உள்ளன. மார்ச் 9 அன்று, கொரோனாவை சாதாரண சளிக்காய்ச்சலுடன் ஒப்பிட்டார்; ‘தின்க் அபௌட் தட்!’ (அப்படித்தான் நினைக்கிறேன்) என்று எழுதினார். இரண்டு நாட்கள் கழித்து, உலக சுகதார அமைப்பு உலகளாவிய தொற்று அபாயத்தை அறிவித்தது. மார்ச் 13 அன்று, டிரம்ப் தேசிய அவசர நிலையை அறிவித்தார்; உலக சுகதார அமைப்பு நெருக்கடி நிலையை அறிவித்து ஆறு வாரங்கள் கழித்து.

கோவிட்-19 நமக்குக் கற்றுத்தரும் பாடம் என்ன?
ஆனபொழுதும், இப்பிரச்சனைக்கொரு ஆபத்தான  எதிர்வினையை டிரம்ப் தொடங்கிவைத்தார். இப்பிரச்ச னைக்கு, அக்கிருமியையோ அல்லது வட அட்லாண்டிக் அரசு கட்டமைப்புகளின் தோல்வியையோ அதன் அரசு களின் திறனின்மையையோ காரணியாகக் கொள்ளாமல், சீனாவையும் உலக சுகதார அமைப்பையும் குற்றம் சாட்ட முடிவு செய்தார். ஆனால் உலகம் சீனாவையும் அதன் செயல்பாடுகளை யும் இந்த ஊரடங்குகளும் முழுவதும் உற்றுக் கவனிக்கத்தான்படுகிறது.

கொரோனாவை சோசலிசமும் முதலாளித்துவம் எப்படி அணுகியுள்ளன என்பது உலகின் முன்பு ஆதாரங்களுடன் நிறுவப்பட்டுவிட்டது. மொரோக்கோவின் ஜனநாயக வழி அமைப்பின் தலைவர்களில் ஒருவரான அப்தல்லாஹ் எல் ஹரிஃப், கொரோனா அதிர்ச்சி குறித்து என்னிடம் பேசினார்: “கோவிட்-19 முதலாளித்துவத்தின் தோல்வியை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது; பெரும் முதலாளித்துவ நாடுகள், குறிப்பாக அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின், இந்நோய்தொற்றைச் சமாளிக்க முடியா மல் திணறுகின்றன. மக்களின் நலனுக்கு முன் லாபத்தை நிறுத்திய நாடுகள் அவை; மக்களைக் காப்பாற்றத் தவறியது மல்லாது, தடுப்பு நடவடிக்கைகளை பெரும்பணக்காரர் களுக்கு வரி விதிக்காமல், இருக்கும் பொது நிதியைக் கொண்டு சமாளிக்குமாறு மக்களை வற்புறுத்துகின்றனர்.

 புதிய தாராளவாத கொள்கைகளைக் கடைபிடித்து இவ்வரசுகள் பொது சுகாதாரக் கட்டமைப்பை அகற்றி, தமது நாட்டு மக்களை இக்கிருமியின் பிடிக்குத் தள்ளியுள்ளனர். அது மட்டுமல்ல, இக்கிருமி முதலாளித்துவ சித்தாந்தத்தின் அறம்சார்ந்த வீழிச்சியையும் நமக்குக் காண்பித்துள்ளது; அவர்கள் நாட்டு முதியவர்களைக் கைவிட்ட விதமும், கியூபா, ஈரான், வெனிசுலா போன்ற நாடுகளுக்கெதிரான தடைகளை வலுப்படுத்தியதுமே இதற்குப் போதுமான ஆதாரங்கள்; இதில் ஐஎம்எப்பின் உதவிப் பொருட்களை உபயோகிக்க வெனிசுலாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டதும் அடங்கும். ஆனால், விரைந்த, துல்லியமான மற்றும் அவசியமான நடவடிக்கைகளை எடுத்ததனாலேயே சீனா வால் கொரோனாவை வீழ்த்தமுடிந்தது.

மக்களின் உயிருக்கு முக்கியத்துவம் அளித்ததனாலேயே அவர்கள் தேவையான நிதி, வளங்களை இதற்காக ஒதுக்கி உப யோகிக்க முடிந்தது. மக்கள் நலனுக்காக இயங்கும் வலு வான சீன சுகாதாரத்துறை இதில் பெரும்பங்கு வகித்தது. கொரோனாவிற்கெதிரான இப்போராட்டத்தில் உலக நாடுகளுக்கு மருத்துவக்குழுக்கள் அனுப்பிவைத்து சீனா வும் கியூபாவும் நமக்கு ஒற்றுமை மற்றும் சர்வதேச மனப்பான்மை குறித்து கற்பித்துள்ளன.

இரண்டு துருவங்கள்
நாம் இப்போது உலகில் ஒரு இருதுருவ கட்டமைப்பின் வலுப்படுத்துதலை கண்டுகொண்டிருக்கிறோம். இராணுவ  வலிமை, உலக நாணயமாக டாலரின் திணிப்பு மேலும் உலக வர்த்தகம் மற்றும் பொருளாதார அமைப்பு முறை யில் அமெரிக்க ஆதிக்கம் போன்ற கொள்கைகளில் ஊன்றியிருக்கும் அமெரிக்கதுருவம் ஒரு பக்கம். பல மான, இறையாண்மை பாராட்டும் திறந்த பொருளாதாரம் கொண்டு வலுப்பெற்று வரும் சீனத்துருவம் இன்னொரு பக்கம். சீனாவிற்கு இராணுவ இலட்சியங்கள் கிடையாது, பிற நாடுகளின் மீது சீனா போர் தொடுப்பதில்லை; சர்வதேச சட்டதிட்டங்களை மதித்து, பிற நாடுகளுடன் ஏகாதிபத்திய நோக்கு அல்லாத வர்த்தக ஒப்பந்தங்களே சீனாவினு டையது. அமெரிக்கதுருவம் தனது ஆதிக்கத்தின் செய லிழப்பு மற்றும் தளர்தலை உணர்ந்துகொண்டு, சீனாவில் மீது பழி சுமத்துவதில் ஈடுபட்டுள்ளது. டிரம்ப் போன்றோரின் அரசுகளின் குறிக்கோளெல்லாம், இந்நோய்தொற்றை சமாளிப்பதில் தாங்கள் செய்த மோசடி குறித்த மக்களின் கருத்துகளை சீனாவின் மீது பழிபோட்டு திசைதிருப்புவது தான்.

வருங்காலம் குறித்த நம்பிக்கை என்ன?
மனிதகுலம் ஒரு முக்கிய வரலாற்றுத் தருணத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்; நாகரிகமின்மை அல்லது கூட்டுறவு மற்றும் ஒற்றுமை இவையிரண்டில் ஒன்றே நாம் முன்செல்லவேண்டிய பாதையாக தேர்ந்தெடுக்க வேண்டும். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப புரட்சிகளின் விளைவாக உற்பத்தி சக்திகள் அசுர வளர்ச்சி கண்டன; இது அனைவரும் சுயமரியாதையுடன் வாழ்வதற்காக ஏற்படுத்திக்கொடுத்த சந்தர்ப்பத்தை பெருமுதலாளிகளின் அறமற்ற பேராசைக்காக வீணடிக்கப்பட்டது. நாம் லாபத்தை விடுத்து மக்களுக்கு முதன்மையளிக்க போராடுகிறோம். இதற்கு, ஏகாபத்தியத்தை எதிர்க்கும், அனைத்து மக்கள் நலனைப்பற்றி சிந்திக்கும் ஒரு மேம்பட்ட மனித சமூ கத்தை நிறுவ முனையும் அனைத்து சாராரின் அரசியல் வலிமையை வளர்த்து ஒருங்கிணைத்தல் அவசியம்.” - மொராக்கோ தலைவர் அப்துல்லா எல் ஹரிஃப்பின் இந்த வார்த்தைகள் உலகம் முழுமைக்கும் வழிகாட்டுகின்றன.  

எங்களிடம் அண்மையில் பேசிய பிங்க் ஃபிளாய்டின் புரட்சிகர இசைஞர் ரோஜர் வாட்டர்ஸும் இதையே கூறுகிறார்: ‘ஒருவருடன் ஒருவர் சண்டை போடுவதைவிடுத்து, ஒருங்கிணைந்து செய்ல்பட்டால் மட்டுமே நாம் இப்பிரச்சனையிலிருந்து வெளிவந்து, நம் அனைவரது வீடாகிய இப்பூமியைக் காப்பாற முடியும்.’ ஷாங்காயைச் சேர்ந்த ஓவியர் லீ சாங்க், இவர், அயராது உழைத்த வுகான் பணியாளர்கள் மற்றும் மக்களுக்காக ஒன்றரை மாத ஊரடங்கில் 129 ஓவியங்கள் வரைந்தார். இவரிடம், இதுபோன்ற நிலைமையில் அல்லது பொதுவாக கலைஞர்களின் பணி என்ன என்று கேட்டதற்கு ‘‘நிலவும் நிலைமையை நம்பிக்கையூட்டும் விதமாகப் பிரதிபலிக்கலாம். ஆனால் உண்மையாக இருக்க வேண்டும். பிற நாடுகள் மீது பழி சுமத்துவதோ, தவறாக தகவல்களைப் பரப்புவதோ கூடாது, ஏனெனில் இக்கிருமியைத் தோற்கடிக்கும் இப்பெரும்சவாலை எதிர்கொள்ள நாம் ஒன்றாகயிருப்பது அவசியம்’ என்று கூறினார். ‘கொரோனாவே விடைகொடு,‘ பெரும் ஊரடங்கே விடைகொடு’ என்று நாம் பாட விழைகிறோம்.

தமிழில் : விகாஷ் ஷிவ்ராம்