tamilnadu

img

கேரளா, தமிழக முதல்வர்கள் பேச்சுவார்த்தை - சிபிஎம் வரவேற்பு

கேரள தமிழக முதல்வர்கள் பேச்சுவார்த்தைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநிலக்குழு வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது 

தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களுக்கிடையிலான  பல்வேறு நதிநீர் பிரச்சனைகள் குறித்து இருமாநில முதல்வர்களும் செப்டம்பர்- 25 ந்தேதி சந்தித்து பேசவுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு வரவேற்கிறது. தமிழகத்தின் பாசனம் மற்றும் குடிநீர் சம்பந்தமான பல்வேறு  ஒப்பந்தங்கள் கேரள மாநிலத்துடன் நீண்ட காலமாக நடைமுறையில் உள்ளது. இதில் அவ்வப்போது சில சர்ச்சைகள் ஏற்பட்டு இருமாநிலங்களுக்கு இடையிலான உறவில் சில பாதிப்புகள் ஏற்பட்டன.

இந்த சந்திப்பின் மூலம் இருமாநில உறவுகள் பலப்படுத்துவதுடன் நிலுவையிலுள்ள அனைத்து நதிநீர் மற்றும் பாசன பிரச்சனைகளுக்கும் தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கையை மாநிலக்குழு தெரிவித்துக்கொள்கிறது.

;