கொரோனா நோய் பரவல் காரணமாக நமது நாட்டில் மத்திய அரசு ஊரடங்கை அமல்படுத்தியதை தொடர்ந்து பல கோடி புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்வு மற்றும் வாழ்வுரிமைகள் கேள்விக்குறியாக மாறி விட்டது. நமது நாட்டில் சுமார் 10 கோடி புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளதாக கடந்த 2016ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு நலன் துறையின் சார்பில் ஒரு கேள்விக்கு பதிலாக தெரிவிக்கப்பட்டது. இத்தகைய தொழிலாளர் வர்க்கமே நமது நாட்டின் மொத்த உற்பத்தி திறனில் 10 சதவீதம் வழங்குவதாக உள்ளனர். கண்ணுக்கு தெரியாமல் தங்களின் உழைப்பை செலுத்தி இந்தியாவின் உற்பத்தியில் தங்களது பங்களிப்பை வழங்கி வந்தனர். கடந்த மார்ச் 24 அன்று வெறும் 4 மணிநேரம் மட்டுமே அவகாசம் வழங்கி ஊரடங்கை பிரதமர் அறிவித்த போது கோடிக்கணக்கான தொழிலாளர்கள் செய்வது அறியாது திகைத்தனர். தேசம் முழுவதும் பொது போக்குவரத்து முடங்கிய நிலையில் வருமானம் மற்றும் சமூக பாதுகாப்பு இல்லாமல் திண்டாடும் நிலை ஏற்பட்டது. இத்தகைய நடைமுறைச் சூழலில் நமது நாட்டில், மாநிலங்களில் உள்ள புலம் பெயர் தொழிலாளர்கள் பற்றிய புள்ளி விபரங்கள், தரவுகள் போன்றவை அவர்களின் வாழ்க்கை முறை, தேவைகள் மற்றும் அவர்களுக்கு தேவைப்படும் வாழ்வுரிமைத் தேவைகளை சந்திக்க பெரிதும் உதவி புரியும்.
கடந்த ஜனவரி 2017ஆம் ஆண்டில் புலம் பெயரும் தொழிலாளர்கள் பற்றி மத்திய அரசின் வீடு வசதி மற்றும் நகர வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் வெளியீடு செய்த புள்ளி விபரங்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறிப்பாக ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் புலம் பெயரும் காரணங்களை தெரிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் முடியும்.
மக்கள் இடம் பெயர காரணங்கள்
கிராமங்களில் இருந்து நகரங்களை நோக்கிய இடப் பெயர்வு:
காரணங்கள் ஆண்கள் பெண்கள்
வேலை வாய்ப்பு 49.7 % 5.7 %
கல்வி 4.1 % 2.1 %
குடும்பம் 36.4 % 86.4 %
பிற காரணங்கள் 9.9 % 6.4 %
பிற மாநிலங்களை நோக்கிய இடம்பெயர்வு:
காரணங்கள் ஆண்கள் பெண்கள்
வேலை வாய்ப்பு 66.5 % 5 %
கல்வி 1.6 % 0.6 %
குடும்பம் 21.1 % 85.8 %
பிற காரணங்கள் 10.71 % 8.6 %
இவ்வாறு வேலை வாய்ப்பு, கல்வி, குடும்பம் மற்றும் பிற காரணங்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் இடம் பெயர முக்கிய காரணிகளாக உருவெடுத்துள்ளது.
இடம் பெயரும் தொழிலாளர்கள் பணி புரியும் துறைகள்
தங்கள் பொருளாதார சிரமங்களைப் போக்கிக் கொள்ள மாநிலங்களை விட்டு இடம் பெயரும் தொழிலா ளர்கள் - ஆண்கள் மற்றும் பெண்கள் பல்வேறு துறைகளில் பணி செய்து வருகின்றனர். இத்தகைய புள்ளி விபரங்கள், அவர்களின் வேலை வாய்ப்புத் தன்மை மற்றும் சந்தையில் உள்ள தேவைகளை புரிந்து கொள்ள உதவும்.
வ. துறைகள் பங்களிப்பு (%
எண் ஆண்கள் பெண்கள்
1. அடிப்படை துறைகள் 20 % 65 %
2. உற்பத்தி துறைகள் 51 % 38 %
3. பொது தேவைகள் 40% 56 %
4. கட்டுமானம் 32 % 67 %
5. பாரம்பரிய சேவைகள் 29 % 55 %
6. நவீன சேவைகள் 40 % 52 %
7. மொத்தம் 33 % 56 %
மேற்கண்ட புள்ளி விபரங்களைப் பார்க்கும்போது புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் உழைப்பு விகிதத்தில் பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு அதிகம் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
நமது நாட்டில் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 2007-2008 கால கட்டங்களில் தங்களது வீடுகளுக்கு அல்லது குடும்பங்களுக்கு அனுப்பிய தொகை ரூ.50,000 கோடிகள்; இதில் 60% தொகை மாநிலங்களை கடந்து 80% கிராமங்களை அடைந்துள்ளது. இந்த வருமானமே 30% வீட்டு செலவினங்களை நிறைவு செய்துள்ளது. சுமார் 70% பெறப்பட்ட கூலி அல்லது சம்பளம் முறைசாரா தொழில்கள் வாயிலாக பெறப்பட்டுள்ளது. மாநில அளவில் பார்க்கும்போது வேலை செய்யும் தொழிலாளர்களில் பல மாநிலங்களில் வேலை செய்ய இடம் பெயர்ந்த தொழிலாளிகள் என்பதை கடந்த 2011 மக்கள் தொகை கணக்கீடு புள்ளி விபரங்களை கொண்டு தெரிந்து கொள்ள முடியும்.
வ. எண் மாநிலங்கள் இடம் பெயர்ந்த
தொழிலாளர்கள் (%)
1. ஜம்மு மற்றும் காஷ்மீர் 22
2. பஞ்சாப் 50
3. ஹரியானா 42
4. ராஜஸ்தான் 32
5. குஜராத் 45
6. மத்தியப் பிரதேசம் 34
7. கோவா 78
8. மராட்டியம் 51
9. கர்நாடகா 43
10. கேரளா 53
11. தில்லி 43
12. இமாச்சலப் பிரதேசம் 39
13. உத்தரகண்ட் 43
14. உத்தரப் பிரதேசம் 28
15. ஒடிசா 37
16. சத்தீஸ்கர் 35
17. ஆந்திரா 45
18. தமிழ்நாடு 43
19. சிக்கிம் 40
20. அருணாச்சல பிரதேசம் 46
21. அசாம் 34
22. நாகலாந்து 28
23. மணிப்பூர் 24
24. மிசோரம் 35
25. திரிபுரா 35
26. மேகாலயா 36
27. பீகார் 36
28. மேற்குவங்காளம் 37
29. ஜார்க்கண்ட் 29
மேற்கண்ட புள்ளி விபரங்களை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது கோவா, மராட்டியம், கேரளா, பஞ்சாப் போன்ற மாநில தொழிலாளர்களில் 50 சத வீதத்திற்கு மேல் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் என்பதை நாம் காண முடியும். மேலும் ஹரியானா, குஜராத், கர்நாடகா, தில்லி, உத்தரகண்ட், ஆந்திரா, தமிழ்நாடு, சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய ஒன்பது மாநிலங்களில் 40 சதவீதம் பேர் மொத்த தொழிலாளர்க ளில் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் என்பதை நாம் காண முடியும்.
கேரள மாநிலத்தில் இடம் பெயர்ந்த தொழிலாளர்களின் விபரங்கள்
மும்பையை சேர்ந்த தொண்டு நிறுவனமான ‘இடப் பெயர்வு இப்போது’ (Migration now) உருவாக்கிய மாநிலங்கள் இடையிலான இடப் பெயர்வு கொள்கை குறியீடு 2019 படி நமது நாட்டின் மாநிலங்கள் தொழிலாளர் சட்டங்கள், வீடு, வசதி, சமூக பாதுகாப்பு, உடல் நலம் மற்றும் சுகாதாரம் மற்றும் அரசியல் பங்கேற்பு ஆகியவை கொண்டு அளவீடு செய்யப்பட்டது. இந்த குறியீட்டில் 63 காரணங்கள் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில் கேரள மாநிலம், இடம் பெய ரும் தொழிலாளர்களுக்கு மிகவும் உகந்ததாக 62 மதிப்பெண்கள் பெற்று காணப்பட்டது. இதன் பின் மராட்டியம் (42), பஞ்சாப் (40), ஹரியானா (35), தமிழ்நாடு (37), குஜராத் (35) மற்றும் தில்லி (33) பெற்று இடம் பெயர்வு தர வரிசை பட்டியல் வெளியீடு செய்யப்பட்டது. இதன்படி நமது நாட்டில் இடம் பெயரும் தொழிலாளர்களுக்கு மிகவும் உகந்த மாநிலமாக இடதுசாரி ஆளும் கேரளா மாநிலம் உள்ளதை நாம் காணமுடியும்.
கேரளாவில் இடம் பெயரும் தொழிலாளர் பணிபுரியும் துறைகள்
கேரளா மாநிலத்தில் உள்ள இடம் பெயரும் தொழி லாளர்களுக்கான இலவச காப்பீட்டு திட்டத்தில் சுமார் 5.09 லட்சம் தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். மேலும் சுமார் ஒன்று முதல் இரண்டு லட்சம் தொழிலாளர்கள் இத் திட்டத்தில் பதிவு செய்யாமல் இருப்பதாக மாநில தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது. அண்மையில் உச்சநீதிமன்றத்திற்கு கேரள மாநிலத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்ட பதிலில் கேரளாவில் 4.34 லட்சம் தொழிலாளர்கள் ஊரடங்கு காலத்தில் உள்ளதாகவும், இதில் 1.61 லட்சம் தொழிலாளர்கள் தங்களது மாநிலத்திற்கு செல்ல விரும்பவில்லை என்றும் அவர்கள் தொடர்ந்து வேலை செய்ய விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டவுடன் அதிகளவு தொழி லாளர்கள் மீண்டும் கேரளா மாநிலத்திற்கு வர விருப்பம் தெரிவித்துள்ளனர். இது தவிர பிற நாடுகளில் பணிபுரிந்து விட்டு தங்கள் மாநிலத்திற்கு வருகை தரும் கேரளா மக்களும் இடம் பெயர்வு தொழிலாளர்களின் பணிகளை செய்ய உள்ளதால் பெரிய அளவிலான தொழிலாளர் பிரச்சனை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கூலி மற்றும் நுகர்வுப் பொருட்களின் விலை விகிதம்
கேரளாவில் தற்போது பல மாநிலங்களைச் சேர்ந்த இடம் பெயரும் தொழிலாளர்களுக்கு அதிக அளவில் சம்பளம், கூலி மற்றும் சமூக பாதுகாப்பு வழங்கப்படுவதால் பலர் தங்களின் சொந்த ஊர்கள், மாநிலங்களுக்கு செல்லவில்லை. ஊரடங்கு காலத்திற்கு முன்பாக “ரம்ஜான்” கொண்டாட சென்ற பலரால் மீண்டும் கேரளா விற்கு வந்து பணிபுரிய முடியாத நடைமுறைச் சூழலே நிலவுகிறது.
தற்போது பல வெளிநாடுகளில் பணிபுரியும் மலையாளிகள் மீண்டும் தங்கள் சொந்த மாநிலமான கேரளாவிற்கு வருகை தந்து பணிபுரியும் போது கேரளாவில் வழங்கப்படும் குறைந்தபட்ச சம்பளம் மற்றும் கூலி மிகவும் உயர்ந்ததாகவும், இதனால் குறைந்த நேரம் உழைத்தால் கூட அவர்களுக்கு தேவைப்படும் நுகர்வுப் பொருட்களை வாங்கி விடக்கூடிய சூழலும் நிலவுகிறது.
அதனால் பல மாநில தொழிலாளர்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து தங்கள் ஊர்களுக்கு திரும்பும் தொழிலாளர் வர்க்கத்திற்கு கேரளா மாநிலம் ஒரு சிறப்பான வேலை வாய்ப்பு, பணி பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பு வழங்கும் சிறந்த மாநிலமாக உருவெடுத்துள்ளது.
இவ்வாறு அதிகளவு சம்பளம், கூடுதல் வேலைக்கு கூடுதல் பணம். பாதுகாப்பான தொழிலாளர் சட்டங்கள் மற்றும் உழைப்பு சுரண்டல் இல்லாத சமுதாயமாக கேரளா வின் இடதுசாரி ஜனநாயக கூட்டணியின் ஆட்சி தொடர்வ தால் உழைப்பு வர்க்கத்திற்கு, தொழில் துறையின் வளர்ச்சிக்கும், எதிர்கால முதலீடுகளுக்கு மிகவும் பாது காப்பான மாநிலமாக நமது நாட்டில் உள்ள அனைத்து மாநி லங்களில் முதலாவதாகவும், பல மேலை நாடுகளை காட்டிலும் சிறப்பானதாகவும், புலம் பெயர்ந்த தொழிலா ளர்களின் நலன்களில் உலகிற்கே வழிகாட்டும் மாநில மாகவும் உருவாகியுள்ளது.
கட்டுரையாளர் : இணைப் பேராசிரியர், வேளாண்மை விரிவாக்கத்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.